Followers

Thursday, May 12, 2016

கைது செய்யப்பட்ட 10 முஸ்லிம்களில் நால்வர் விடுதலை!



கைது செய்யப்பட்ட 10 முஸ்லிம்களில் நால்வர் விடுதலை!

'ஜெய்ஸே முஹம்மது' என்ற தீவிரவாத குரூப்போடு தொடர்புடையவர்கள் என்று கூறி டெல்லி போலீஸ் 10 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களில் நான்கு பேரை குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற ஆறு பேரும் கூடிய விரைவில் விடுவிக்கப்படுவர். கைது செய்யப்பட்ட அவைரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற வேண்டும், பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக ரோட்டில் தாடி வைத்து நடந்து செல்லும் அப்பாவிகளை குற்றவாளிகளாக சித்தரிப்பது காவல் துறையில் தொடர்கிறது. பகிரங்கமாக கொலை, கொள்ளை , கற்பழிப்புகளை செய்து வரும் இந்துத்வாக்களை இந்த காவல் துறை கண்டு கொள்ளாது. அப்பாவிகளை கைது செய்வதும் சில நாட்களுக்குப் பிறகு விடுவிப்பதும் தொடர்கதையாகிறது.

இவ்வாறு விடுதலையானவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மான நஷ்ட வழக்கு பதிந்தாலே இது போன்ற போலி கைதுகள் குறையும். கைது செய்தவுடன் 'முஸ்லிம் தீவிரவாதி கைது' என்று பிரசுரிக்கும் பத்திரிக்கைகள் அவர்கள் விடுதலையாவதை ஏனோ பிரசுரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை மக்கள் தீவிரவாதிகளாக பார்த்து சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும் நினைப்பே!

தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
சியாஸத்
10-05-2016

http://www.siasat.com/news/no-evidence-delhi-police-tagged-10-innocents-terrorists-released-all-956911/






No comments: