Followers

Saturday, October 05, 2019

கோவில் திருவிழாவை பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

கோவில் திருவிழாவை பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமா?
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம். இங்குள்ள ஒரு கோவிலில் கர்பா என்ற கோவில் திருவிழா நடந்துள்ளது. இந்த திருவிழாவைக் காண ஜெய்ஷ் சோலங்கி, பிரகாஷ் மற்றும் இரண்டு தலித்கள் சென்றுள்ளனர். கோவிலுக்கு அருகே அமர்ந்து திருவிழாவை கண்டு ரசித்துள்ளனர். இதனை பார்த்து விட்ட படேல் சாதி இளைஞர்கள் கும்பலாக வந்து தலித் இளைஞர்களை தாக்கியுள்ளனர்.
இது பற்றி போலீஸ் அதிகாரி கூறும் போது 'இது போன்ற விழாக்களை பார்க்க உங்களுக்கு அனுமதியில்லை' என்று கூறிக் கொண்டே அந்த இளைஞர்களின் தலையை சுவற்றில் மோதினர். அதில் ஜெய்ஷ் சோலங்கி என்ற தலித் இளைஞர் இறந்துள்ளார். எஃப்ஐஆர் போட்டுள்ளோம். கூடியவிரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்' என்கிறார்.
'You have no right' Dalit man beaten to death for watching garba event in Gujarat's Anand district
A 21-year-old Dalit youth was beaten to death for merely watching a garba event underway in a temple from afar in Gujarat's Anand district.
தலித்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர். ஒரு இந்து கோவில் திருவிழாவை காண்பது கொலை செய்யும் அளவுக்கு குற்றமா என்ன? சாதி வெறி இந்துத்வாக்களால் எந்த அளவு பரப்பப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து விளங்கும்.
தகவல் உதவி
இந்தியா டுடே
02-10-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்



No comments: