Followers

Thursday, October 03, 2019

இவர்களிடமிருந்து நாட்டை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

'வங்கியில் எனது கணக்கில் ஒரு லட்சம் உள்ளது. எனக்கு 5000 பணம் தேவை. அதை எடுக்க வந்தேன். மூன்று மாதத்துக்கு பணம் எடுக்க முடியாது என்று வங்கி ஊழியர்கள் சொல்லி விட்டனர். நான் மட்டுமல்ல. என்னைப் போல பல வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் பணம் திருப்பி கொடுக்கப்பட வில்லை' என்று அழுது கொண்டே சொல்கிறார்.
வட மாநிலங்களில் ஒரு சில வங்கிகளில் இருப்பு இல்லை. எனவே வாடிக்கையாளர்கள் மூன்று மாதம் வரை பணம் எடுக்க முடியாது என்று அறிவிப்பும் எழுதி வைத்துள்ளனர். இதில் பாஜக மேலும் ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்டுள்ளதாம். தென் மாநிலங்களுக்கு வெளி நாட்டு பணம் கொட்டுவதால் ஓரளவு சமாளிக்கிறார்கள். வட மாநிலங்கள் இது போன்று செழுமையாக இல்லாததால் பணம் கையிருப்பு இல்லை.
பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சி எடுக்காமல் பசு பாதுகாப்பு, ராமர் கோவில், அகதிகள் களையெடுப்பு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது என்று காலத்தை கடத்திக் கொண்டுள்ளது BJP.
இவர்களிடமிருந்து நாட்டை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.


No comments: