Followers

Monday, October 28, 2019

இந்த நாட்டில் நடத்தப்பட்ட மிகப் பெரிய அயோக்கியத்தன நாடகம் ஒன்று...



இந்த நாட்டில் நடத்தப்பட்ட மிகப் பெரிய அயோக்கியத்தன நாடகம் ஒன்று...
அதாவது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு CAGல் இருந்த ஒருவர், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்ததாக கூறினார்.
இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.உண்ணாவிரதம் எல்லாம் இருந்து உடல் மெலிந்தார்.
மூன்றாவது ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்.
பின்னர் நான்காவது ஒரு மனிதனும் தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஐந்தாவதாக ஒரு மனிதர் 2 ஜி ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.
ஏழாவதாக அதற்கு சாட்சி சொன்னவன் பா சிதம்பரம் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவன்.
எட்டாவதாக ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்.
ஏழு வருடங்கள் கழித்து ...
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர். இது ஒரு ஊழலே அல்ல என்றது சட்டமும் நீதிமன்றமும்...
இப்போது முதல் மனிதன் (வினோத் ராய்) பி.சி.சி.ஐ. இன் முதலாளியாகிறார். மேலும் பத்ம பூஷன் விருதும் பெறுகிறார்.
இரண்டாவது மனிதர் அன்னா ஹசாரே, மௌனமாக இருந்து, Z + பாதுகாப்பு பெறுகிறார்.
மூன்றாவது பெண் (கிரன் பேடி) ஒரு கவர்னர்.
நான்காவது மனிதர் (அரவிந்த் கெஜ்ரிவால்) தில்லி முதல்வர்.
ஐந்தாவது மனிதன் (ராம்தேவ்) ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆனார். மேலும் கோடிகளில் நனைகிறார்.
ஆறாவது மனிதன் (சுப்ரமணியம் சுவாமி) எம்.பி. ஆகி கட்சியின் பொறுப்புக்கு வருகிறார்.
ஏழாவது மனிதர் இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆனார்.
இந்தியர்கள் அனைவரும் முட்டாளாக ஆனோம்.
இது உண்மைகள் நிறைந்த ஒரு ஐயோக்கியத்தனமான நாடகம்.... என்று மனசுக்கு உரைத்தது...
இதில் இன்னொரு பகீர் உண்மை யும் உரைக்குது
அதாவது இந்த நாடகத்தின் நடிகர்கள் வினோதராய்,அன்னா ஹசாரே,கிரண்பேடி,கெஜ்ரிவால்,பாபா ராம்தேவ்,சுப்ரமணியன்சாமி, என அத்தனை பேரும் பிராமணன்கள்..
ஊதி பெரிதாக்கிய அத்தனை ஊடகங்களும் அர்னாப் கோஸ்சுவாமி ஜூனியர் விகடன் ஆனந்தவிகடன் உட்பட பிராமண ஊடகங்கள்.. இவர்கள் அத்தனை பேரும் Rss ல் இருப்பவர்கள்...
வில்லன்களாக கட்டப் பட்டவர்கள் கனிமொழி ஆ.ராசா தயாளு அம்மாள் கருணாநிதி,ன்னு அத்தனை பேரும் சூத்திரர்கள் ன்னு சொல்லப்படுபவர்கள்...
இது காலம்காலமாக நடந்து வரும் ஆரிய தமிழர் போரின் நவீன வடிவம் என்பது தான் நம் அறிவுக்கு உரைக்கும் கொடூரமான உண்மை ....
Beware of பூணூல்ஸ் ..
நாடார் சமூகத்தில் பிறந்து ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் கலந்து கொண்டு பார்பன அடிமையாகவே மாறிப் போய் விட்ட அன்பு ராஜ் போன்றவர்களுக்கு தாங்கள் இந்துத்வாக்களால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமலேயே பிஜேபிக்கு கொடி பிடிக்கிறார்கள். அவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விட்டார்கள். தாங்களளே பாதிக்கப்படும் போதுதான் அதன் வலியை உணர்வார்கள். அது வரை கொடி பிடித்துக் கொண்டிருக்கட்டும்.

No comments: