Followers

Monday, October 28, 2019

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ரசூல் தேவையில்லை

//So according to you nobody has to introduce God for a child, I agree. However you have to introduce Your rasool to the child if not he will never know about him. Which will again term him as a kaffir according to suvanapriyan.
Nobody have problem in believing one God, but most of us dont need a rasool between God and me.// - Vijay
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ரசூல் தேவையில்லை என்பது உங்களின் வாதம். இதனால்தான் பிரச்னைகளே ஆரம்பமாகிறது.
ஏசு நாதர் தன்னை கடவுள் என்று எங்குமே சொன்னதில்லை. ஆனால் அவரை கிருத்தவர்கள் கடவுளின் மகனாக பாவித்து வழிபட்டு வருகின்றனர்.
மோசே இறைத் தூதராகத்தான் யூதர்களிடம் பிரசிங்கித்தார். அவரது இறப்புக்குப் பின் அவரையே கடவுளாக்கி விட்டனர்.
உலக ஆசைகளை வெறுத்து சந்நியாச வாழ்வை மேற் கொண்டார் புத்தர். கடைசியில் அவரையும் கடவுளாக்கி விட்டனர் பவுத்தர்கள்.
நமது நாட்டிலோ நாய், பன்றி, கருடன், மயில் என்று எதை எடுத்தாலும் அதற்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கிறோம். இறந்து போன நல்லவர்களையும் அரசர்களையும் கடவுளாக வழிபடுகிறோம். இதெல்லாம் கடவுளுக்குரிய இலக்கணமா?
கடவுளுக்கு மனைவி, மக்கள் இருந்தால் கடவுளாக முடியுமா? உறங்குபவர் கடவுளாக முடியுமா? உலக ஆசா பாசங்கள் உடைய ஒருவர் கடவுளாக முடியுமா? நம் காலத்திலேயே கல்கி பகவான் என்ற ஏமாற்று பேர் வழி பல கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு ஓடியதை பார்த்தோம். நித்தியானந்தா வையும் அவர் அடித்த கூத்துக்களையும் பார்த்தோம்.
இதெல்லாம் ஏன் நடக்கிறது? இது போன்ற மோசடிகள் இஸ்லாமியர்களிடத்தில் ஏன் நடப்பதில்லை என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கான காரணம் கடவுளுக்குரிய இலக்கணம் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாததாலேயே இத்தனை குளறுபடிகள் இந்து மதத்தில் நடக்கின்றன.
கடவுளுக்கான இலக்கணத்தை வகுக்கக் கூடியவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத் தூதர்களாகத்தான் இருக்க முடியும். அவர்தான் கடவுளோடு உரையாடக் கூடியவர். மனிதர்கள் இப்படித்தான் வாழ வேணடும். இறைவனை இப்படித்தான் வணங்க வேண்டும் என்ற கட்டளைகளை ஒரு இறைத் தூதர்தான் கொண்டு வர முடியும்.
திருக்குறள், திரு மந்திரம் போன்றவைகள் கூட ஒரு காலத்தில் இறை வேதங்களாக இருந்திருக்கலாம். பின்னால் வந்த ஆட்களால் அவற்றில் மனிதக் கருத்துக்களும் சில புகுந்திருக்கலாம். இறைவனே உண்மைகளை அறிவான். கீழடியில் நடந்த ஆய்வுகளில் தற்போது தமிழர்களால் வணங்கப்படும் எந்த தெய்வத்தின் உருவங்களும் கிடைக்கவில்லை. ஆனால் மிகச் சிறந்த எழுத்தறிவு சமூகமாக இருந்துள்ளனர் தமிழர்கள். தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இறைத் தூதர்களை மறந்ததால்தான் இன்று தமிழர்கள் தங்களின் தொன்மையான வரலாற்றையும் தெய்வ வழிபாட்டையும்இழந்து நாயையும், பன்றியையும், கருடனையும் வணங்கி வருகின்றனர்.
அதே நேரம் இஸ்லாமியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். வழிபாடுகள் சம்பந்தமாக எதைச் செய்தாலும் அதனை நபிகள் நாயகம் செய்திருக்கிறார்களா? தங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறாரா? என்று ஆய்வு செய்த பின்புதான் எந்த வணக்கத்தையும் மேற் கொள்வார்கள். எனவேதான் உலகம் முழுக்க முஸ்லிம்களின் வழிபாடானது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் சாதிக்கு ஒரு கடவுள்: அவர்களுக்கென்று தனி வழிபாடு. ஆனால் அனைவரையும் இந்துக்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரு சிறிய மாநிலமான தமிழகத்திலேயே இந்த நிலை?
ஆனால் ஹஜ்ஜூக்கு புனித பயணம் மேற் கொள்ளும் ஒரு தமிழனும், ஒரு ஐரோப்பியனும், ஒரு ஆப்ரிக்கனும் எந்த வழி காட்டலும் இல்லாமல் வருடா வருடம் தங்களின் கடமைகளை சரி வர செய்ய முடிவதன் காரணம் நாங்கள் நபிகள் நாயகத்தையும் அவரது பொன் மொழிகளையும் மதிப்பதால்தான்.
எனவே ஓரிறைக் கொள்கையோடு அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ரசூலும் முக்கியமாகப்படுகிறார்.


5 comments:

vara vijay said...

What suvi only Hod can write grammar for him not any rasool. From your article itself evident that we dont need any intermediator between me and God. If you people are really following your God word then why you are allowing kingdom rule in Arabia, is it not unislamic.

Dr.Anburaj said...

இதெல்லாம் ஏன் நடக்கிறது? இது போன்ற மோசடிகள் இஸ்லாமியர்களிடத்தில் ஏன் நடப்பதில்லை என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கான காரணம் கடவுளுக்குரிய இலக்கணம் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாததாலேயே இத்தனை குளறுபடிகள் இந்து மதத்தில் நடக்கின்றன.
--------------------
அரேபிய வல்அலாதிக்புகம்ப இந்க்கா்த உலகை 1600 ஆண்டுகளாக இரத்தக்களறியில் குளிப்பாட்டி வருகின்றது.முறையாக இறைதத்துவம் படித்து என்ன கிழித்து விட்டாா்கள். ? பின்லாடன் போன்ற கயவர்கள் உலகத்திற்கு செய்த நாசத்தை விட வேறு எந்த இந்துவும் நாச வேலை செய்யவில்லை.அரேபியாவில் தோன்றி பழக்க வழக்கங்களை ஆண்டவன் கட்டளை என்று நம்புவது முட்டாள்தனம். இரத்தக்களறிக்கு அதுதான் காரணம்.
எதையும் வணங்கட்டும்.தனிமனித சுதந்திரம் கொடுக்கும் போது இப்படி நடக்கத்தான் செய்யும். பழையன கழியும்.புதியன சேரும் என்பது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. மற்றவர்களை குற்றம் சொல்லி காலம் கழிப்பதை விட மேம்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை ஸ்ரீநாராயணகுரு வள்ளலாா் போன்றவர்கள் கற்றுக் கொடுத்துள்ளாா்கள். மக்களை முட்டாள் ஆக வைத்திருக்க விரும்பும் திக திமுக அதிமுக காங்கிரஸ் காரர்கள்தாம் அனைத்து தேக்க நிலைக்கு காரணம். இந்து சமயம் என்ற வரம்பிற்குள் ஆயிரம் உளளது.எதுவும் கட்டாயம் கிடையாது. குரங்கு என்று தாங்கள் அனுமனை குறிப்பிடுகின்றீர்கள். அனுமன் குரங்குதான். வழிபட தேவையில்லைதான். ஆனாலும் அனுமானை தனது இஷ்டவழிகாட்டியாகக் கொண்டவர்கள் பண்பில் உத்தமர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். கற்பு நெறியில் சிறந்தவராக நெஷ்டிக பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பவராக பண்பு எளிமை வீரம் தொண்டு போன்ற அனைத்து சீலங்களும் நிரம்ப பெற்றவர்களாக வாழ்வது அவர்களது குறிக்கோள்.யாரையும் காபீர்கள் என்று இழிவு படுத்து கொல்ல விழைபவர்கள் அனுமானின் பக்கதர் அல்ல. ஆகவே அனுமான் வழிபாடு தத்துவத்திற்கு பொருத்தமற்றது என்றாலும் அதில் தீமை இல்லை.முறையான சமய கல்வியை அளித்தால் காலப்போக்கில் தானாகவே மாறிவிடும். இதற்காக அடிதடி என்று அலைய வேண்டாமே என்பது இந்துக்களின் கருத்து. ஒரு வேதம் ஒரு நபி என்று துவங்கப்பட்ட இசுலாம் இன்று ஆயிரம் துண்டுகளாக சிதறி ஒரு குழு மற்ற குழுவை பயங்கரவாத தாக்குதல் மூலம் அழித்து வருகின்றது. லட்சம் குழுக்களை ஒன்று படுத்தும் அற்புத பணியை இரத்தகளறியின்றி இந்து பண்பாடு இணைத்து வருகின்றது. இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு காரணம் தனிமனித சுதந்திரம். இறைவனை அடைய பல வழிகள் கலாச்சாரம் சாத்தியமே என்ற பண்பட்ட நம்பிக்கைதான் காரணம்.
ஆன்மவியல் இந்து மதத்தில்தான் சிறப்பாக உள்ளது.முறையான கல்வியை மக்களுக்கு அளிக்கவில்லை.பிரச்சனை அதுதான். இசுலாம் காட்டும் சொர்க்கம் ஒரு தேவடியாகுடி போல் உள்ளது. ஒருவனுக்கு 73 பெண்கள் என்பது ஒரு மனநோயாளியின்கா முகனின் கற்பனைச் சித்திரம்.

Dr.Anburaj said...

நம் காலத்திலேயே கல்கி பகவான் என்ற ஏமாற்று பேர் வழி பல கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு ஓடியதை பார்த்தோம். நித்தியானந்தா வையும் அவர் அடித்த கூத்துக்களையும் பார்த்தோம்.

ஆம். அவனவன் தன்னைப் பற்றி ஆயிரம் சொல்வான். கல்கி தவறு செய்கிறாா் என்ற தகவல் கிடைத்தது.நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. சாமியார் என்பதனால் பாதுகாப்பு கிடையாது.தகுதி இருந்தால் இந்துக்கள் கொண்டாடுவார்கள்.தகுதி குறைவு கண்டால் போட்டு உடைத்து விட்டு விலகிவிடுவார்கள்.

இசுலாத்தில் நபி குரான் ஹதீஸ் களில் ஆயிரம் குறைகள் உள்ளது. ஆனால் விமர்சனம் செய்தால் மரண தண்டனை என்பது அறிவு வளா்ச்சிக்கு பொருத்தமானது அல்ல.

Dr.Anburaj said...

முஹம்மது காலத்தில் 3 பேர்கள் தாங்கள் இறைவனின் தூதர் என்று அறவித்துக்கொண்டார்கள்.முஹம்மது அனைவரையும் காலி செய்து விட்டாா்.

Dr.Anburaj said...


இந்தியாவில நபி என்று யாரும் கிடையாது.இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நபி என்று ஒருவன் இறைவன் அனுப்பவில்லை.தேயையில்லை. காலத்திற்கு தக்க அனைத்து துறைகளிலும் பரிணாமம் தடையின்றி நடைபெற அனுமதிக்க வேண்டும். நபி என்பவர் போதனை தேக்கநிலை உருவாகிவிடும். அரேபியமதம் தேங்கி கிடக்கும் தண்ணீர் போலுள்ளது.நாறிவிட்டது. இந்து சமயம் ஓடும் தண்ணீர். அழுக்குகள் ஒடிக்கொண்டிருக்கும்.அகன்று செல்லும்.