Followers

Monday, October 21, 2019

ஒரு சங்கியுடனான சந்திப்பு!

ஒரு சங்கியுடனான சந்திப்பு!
இன்று (21-10-2019) பல் வலிக்காக மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். எனது டோக்கன் 5. எனக்கு அடுத்து டோக்கன் 6 ஒரு மலையாளி. காத்திருந்த நேரம் அந்த மலையாளி என்னிடம் நலம் விசாரித்தார். சிறிது நேரம் கழித்து அரசியல் பக்கம் பேச்சு சென்றது. எதிரில் தொலைக்காட்சியில் ஹரியானா, மஹாராஷ்ட்ரா தேர்தல் சம்பந்தமாக செய்திகள ஓடிக் கொண்டிருந்தது. இனி சங்கியோடு நடந்த உரையாடலை பார்போம்.
'இந்த முறையும் மோடிதான் வருவார் போல் இருக்கிறது. கேரளாவில் அடுத்த ஆட்சி பிஜேபிதான்.'
'தவறு நண்பரே! வட நாட்டில் அதிகம் படிப்பறிவில்லாததால் மோடிக்கு வாக்கு விழுகிறது. எந்த காலத்திலும் கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் ஆட்சியை பிஜேபி பிடிக்கும் என்பது வெறும் கனவுதான்'
'மோடி இந்தியாவை உலக அளவில் மிக உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளார். உலகம் முழுவதும் நமது ராணுவ வலிமையை கண்டு பயப்படுகின்றன.'
'இந்தியா முன்பே உலக அளவில் பிரசித்து பெற்றது. மோடி வந்து அதனை தூக்கி நிறுத்தவில்லை. மேலும் ஆயுதங்களை வாங்கி குவிப்பதால் யாருக்கு நன்மை? பிஜேபிக்கு விசுவாசமாக இருக்கும் இடைத் தரகர்களுக்கு பண மழை பொழியும். சாமான்ய மக்களுக்கு மோடி என்ன செய்தார்? நமது நாட்டு பொருளாதாரம் இன்று எந்த அளவு சீர் கெட்டுள்ளது தெரியுமா? பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி, வாராக் கடன்கள் என்று நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுள்ளது.'
'இல்லை. மோடியும் நிதி அமைச்சரும் நிலைமையை சரி செய்து வருகிறார்கள். வெளி நாட்டு முதலீடுகள் நிறைய வர இருக்கிறது.'
'மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும், பொருளாதாரம் மீள்வது மிக சிரமம் என்கிறார்கள். முதலீடுகள் எப்படி வரும்? தனது சொந்த பணத்தில் மாட்டுக் கறி வாங்கினால் அதனை மோப்பம் பிடித்து கும்பலாக சென்று தாக்குகிறது இந்துத்வா காட்டுமிராண்டி கும்பல். அவர்களை கொலை செய்கிறது. 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று கூறி முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறது இந்த கும்பல். மோடியோ, அமீத்ஷா வோ கொலையாளிகளை சிறையில் அடைப்பதில்லை. அவர்களை ஊக்குவிக்கிறார்கள். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். இந்த நிலையில் யார் நமது நாட்டில் முதலீடு பண்ண வருவர்? பணம் போடுபவன் அனைத்தையும் சிந்திப்பானே!’
'பன்றிக் கறி உங்களுக்கு ஹராம். அதை நீங்கள் தின்பீர்களா?'
'எங்களுக்கு ஹராம். நாங்கள் சாப்பிடுவதில்லை. நாங்கள் வளர்ப்பதில்லை. ஆனால் அதனை சாப்பிடுபவர்கள் எவரையும் போய் நாங்கள் தடுப்பதில்லையே. சாராயம் குடிப்பது ஹராம். ஆனால் அதனை குடிப்பவர்களை போய் நாங்கள் சண்டை செய்து வம்பளப்பதில்லையே. அவர்களை கொல்வதில்லையே'
(இதற்கெல்லாம் பதில் சொல்ல தெரியாமல் சிறிது நேரம் விழித்த மலையாளி சுதாரித்துக் கொண்டு)
'பாகிஸ்தான் தற்போது நம்மை கண்டு பயப்படுகிறது. அந்த நிலையை ஏற்படுத்தியவர் மோடி'
'ஹா.. ஹா... இந்தியாவோடு ஒப்பிடும்போது பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய். நமது நாட்டின் மூன்று மாநிலங்கள் சேர்ந்ததுதான் பாகிஸ்தான். யார் ஆட்சிக்கு வந்தாலும் நமது ராணுவ வலிமையோடு அவர்கள் போராட முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். நம்மோடு நேருக்கு நேர் நிற்க தெம்பில்லாத ஒரு நாட்டை வழிக்கு கொண்டு வந்து விட்டோம் என்பது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.'
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மலையாளி முழித்துக் கொண்டிருக்க எனது டோக்கனும் வந்தது. நான் உள்ளே சென்று விட்டேன். தெரியாத் தனமாக வாயைக் கொடுத்து சரியாக மாட்டிக் கொண்ட சங்கியின் நிலை எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதிகம் பேருக்கு மீடியாக்களால் மோடியைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். மோடி ஒரு காற்றடைத்த பலூன் என்பதை வெகு விரைவில் இவர்கள் உணர்வார்கள்.


6 comments:

vara vijay said...

Suvi, am not a sangha but I have lot of questions will you answer.

Dr.Anburaj said...

20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலும் கேரளத்திலும் பாரதிய ஜனதாக ஆா்எஸ்எஸ் என்றால் யாருக்கும் தெரியாது.ஆனால் இன்று இந்தியன் ஒவ்வொருவரும் அடிக்கடி உச்சரிக்கும் பெயா் நரேந்திர மோடி என்பதே.தாங்கள் கூட அதைத்தான் செய்துள்ளீர்கள்.
மலத்தில் கிடக்கும் புழுக்களைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.

சிங்கத்தை பற்றி யானையை பற்றி அனகோண்டாவை பற்றிதான் அதிகம் பேசுவோம். திரு.மோடி அவர்களைப் பற்றி நாடே பேசுகின்றது.
முஸ்லீம்கள் சதா மோடி பற்றி கம்யுனிஸ்ட சதா மோடி பற்றி திராவிட கழகத்தான் சதா மோடி பற்றி காங்கிரஸ்காரன் சதா மோடி பற்றி - பேசுகின்றான்.வாழ்த்தாக இருக்கலாம்.வசையாக இருக்கலாம். மோடியின் பெயரை அவன் வாய் அதிக நேரம் உச்சரிக்கின்றது. திரு.மோடிஜி அவர்களின் ஆளுகைக்கு இது எடுத்துக் காட்டு.தமிழகத்தில் , கேரளத்தில் பாரதிய ஜனதாவுக்கு கணிசமான வாக்கு வங்கி உருவாகி வருகின்றது.
வீர இந்து குழந்தை இப்போதுதான் தவழ்ந்து விளையாட பழகி வருகின்றது.
காலம் வரும். பையன் இந்து விரோதிகளை இந்தக்களை காபீர் என்பவர்களை அடக்கி ஒடுக்குவான். தேசதுரோகிகள் ஒட்டம் பிடிப்பார்கள். தாய்மதமான இந்து மதம் அரியணையில் ஜொலிக்கும்.

Dr.Anburaj said...

கீதையின் ஐந்தாவது கட்டளை!ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் ஐந்தாவது கட்டளை இது தான் :

Whatever Thou Doest, Do It for the Love of God

நீ எதைச் செய்தாலும் கடவுளின்
மீது அன்பு கொண்டு செய்

இதைப் பற்றி அவர் தரும் விளக்க
உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

எந்தச் செயலைச் செய்தாலும் மனிதர்களை
மகிழ்விக்கச் செய்யக் கூடாது. ஆனால் இறைவனின் அருளைப் பெறவே செய்ய வேண்டும்.

டெட்சு - ஜென் ஒரு புத்த துறவி.
புத்த மத அறநூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது அவரது
பேரவா. இப்படிச் செய்தால் புத்தரின் உபதேசங்கள் ஜப்பானியரைச் சுலபமாக சென்றடையும் என்று அவர் எண்ணினார்.

ஆனால் இதற்காக பெரும் நிதி தேவை.என்பதை உணர்ந்தார். ஆனால் மனம் தளராது ஒரு பொதுநல நிதி ஒன்றை அவர் ஏற்படுத்தி அனைவரிடமும்
நிதி உதவி கேட்டு சேகரிக்க ஆரம்பித்தார்.

பத்து வருட காலம் கழிந்தது.தேவையான நிதி சேர்ந்தது. தனது பணியை ஆரம்பிக்க வேண்டியது தான் என்று அவர் எண்ணினார்.
அப்போது ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டது.உடனடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தேவையான உதவியைச் செய்ய தான் சேகரித்த நிதி அனைத்தையும் கொடுத்தார்.

ஆனால் தான் ஆரம்பித்த பணியைஅவர் அப்படியே விட்டு விடவில்லை.
மீண்டும் பணம் சேகரிக்க ஆரம்பித்தார்.

இன்னொரு பத்து வருட காலம் கழிந்தது.போதுமான நிதி சேர்ந்தது. இந்தச் சமயம்
இன்னொரு பேரிடர் வந்தது. அவர் தான் சேகரித்திருந்த நிதி அனைத்தையும் மக்களுக்கு உதவி செய்வதற்கென இந்த முறையும் கொடுத்தார்.

ஆனால் அவர் தான் எடுத்த பணியை விடுவதாயில்லை.

அடுத்து இந்த முறையும அவர் நிதியைச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்னொரு பத்து ஆண்டுகள் ஓடிய பின்னர் போதுமான பணம் சேர்ந்தது.

கடைசி கடைசியாக ஜப்பானிய மக்களுக்கு
புத்தமத அறநூல்கள் சென்று சேர்ந்தன.

ஜப்பானிய மக்கள் மிக்க அன்புடன் அதை ‘தி தேர்ட் இம்ப்ரெஷன்’ – (The Third Impression)- மூன்றாவது பதிப்பு என்று கூறினர்.முதல் இரண்டு பதிப்புகள் செயல்
முறைப் பதிப்புகளாம். மூன்றாவது பதிப்பு தான் அச்சிடப்பட்ட பதிப்பாம்!

டெட்சு - ஜென் உண்மையான ஒரு
கர்மயோகி. அவர் எதைச் செய்தாலும் இறையன்புடன் செய்தார்.( வெறுப்பு என்பதைஎன்ன வென்று அறியாத உத்தமா் )

ரமண மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனதைப் பொறுக்கமாட்டாத சிலர் அவரிடம் வந்து,“நீங்கள் ஒரு பித்தலாட்டக்காரர். கடவுளிடம் பேசுவதாக நீர் பொய் சொல்கிறீர். எங்கே,அந்தக் கடவுளை எங்களிடம் காட்டுங்கள் பார்க்கலாம்” என்று கூவினர்.

“காட்டாவிட்டால், அவரிடமே உங்களை “அனுப்பி விடுவோம்” என்று அவர்களில்
ஒருவர் எச்சரிக்கவும் செய்தார்.

ரமண மஹரிஷி சாந்தமாக இருந்தார்;அனைத்தையும் கேட்டார்.

பின்னர் அவர்களிடம், “நாளை காலை
எல்லோரும் வந்து விடுங்கள் . கடவுளை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்றார்.

அடுத்த நாள் அனைவரும் வந்துகுழுமி விட்டனர்.

ரமணர் அவர்கள் அனைவரையும் இருள்அடர்ந்த காட்டினூடே அழைத்துச் சென்றார்.
அங்கு சிதிலமடைந்த குடிசை ஒன்று இருந்தது.அதற்குள் இரண்டு ஆடிப்போன கட்டில்கள்
இருந்தன.

குடிசைக்குள் சென்ற அனைவரும் அங்கு ஒரு வயதான தம்பதியினர் கட்டில்களில் படுத்திருப்பதைப் பார்த்தனர். இருவரும் தொழுநோயால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவுடனேயே கூட்டத்தினர் வெகு வேகமாக வெளியே சென்று தூரத்தில் நின்றனர்.

ரமணரோ அவர்கள் காயத்தைக் கழுவி கட்டுப் போட்டார். மெதுவாக நடந்த இந்தச் செயல் மூன்று மணி நேரம் நீடித்தது.

பின்னர் கூட்டத்தினரை நோக்கிய ரமணர்,”அதோ அவர்களிடம் நான் கடவுளைப் பார்க்கிறேன். அவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் மூலமாக இறைவனுக்கு நான் தொண்டு செய்கிறேன்” என்றார்.

அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர்.அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரது அருளுக்காக வேண்டினர்.மனிதன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவன் இறைவனின் பக்கத்தில் இருக்கிறான்.

எந்தச் செயலைச் செய்தாலும் இறைவன் மீதான அன்புடன் செய்ய வேண்டும்!

இது தான் கீதை தரும் கட்டளை!

Dr.Anburaj said...

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)
பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.
அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான்.
ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும் தகவல் இதோ:

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்


வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.


Dr.Anburaj said...

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன் என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

“அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

Dr.Anburaj said...

திரு.விஜய் அவர்களே சுவனப்பிரியன் நான் பதிவு செய்திருக்கும் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் பதிவு செய்யவில்லை. அரேபிய அடிமைகளின் போக்கு அதுதான். இந்த உலகில் மனிதன் மிகவும் பிந்திதான் பிறந்திருக்கின்றான். அதற்கு முன் டயோசானார்கள் போன்ற கொடுரமான மிருகங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எலும்புக் கூடுகள் வகைவகையாய் கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்காமல் ஒட்டு மொத்தமாய் பரிணாம கொள்கை தவறு என்று முட்டாள்தனமாக வாதிடும் அரேபிய அடிமைகளின் சிந்தனை ஓட்டம் ஆபத்தானது. மனிதன் இன்னு்ம் பல நாடுகளில் நாகரீகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கினறான். அதற்கெல்லாம் காரணங்கள அரேபிய மத புத்தகத்தில் கிடையாது. தேக்கநிலைதான் அரேபிய நாகரீகம் பாழாகி வருகின்றது