Followers

Sunday, October 27, 2019

நண்பர் விஜய்க்கு எனது பதில்!

நண்பர் விஜய்க்கு எனது பதில்!
//Allah and his rasool never allow a mumin to pray for a kaffir health. Show me evidence from Quran whether your tntj prayer is halal or harram.// -Vijay
குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீண்டு வர டிஎன்டிஜே தோழர்கள் தொழுகையில் ஈடுபட்டதை செய்தியாக போட்டிருந்தோம். அதற்கு ஆதாரம் கேட்கிறார் நண்பர் விஜய். அவரது கேள்விக்கான விளக்கத்தை தருகிறேன்.
-------------------------------------------------------------------
''பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே'' -ஆய்வில் உறுதி!
'பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இஸ்லாமிய) இயல்பிலேயே பிறக்கின்றன வளர்ப்பு முறையில் தான் அந்த குழந்தைகள் யூதனாகவும், கிருதுவனகவும், நெருப்பை வணங்ககுடியவனாகவும் வார்த்தெடுக்க படுகின்றனர்.'' (அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2568)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழிகளில் இதுவும் ஒன்று அந்த மாமனிதரின் இந்த சொல்லும் அவரின் தனித்துவத்தையும் அவர்களின் துதுத்துவத்தையும் அறுதியிட்டு உறுதி கூறும் அற்ப்புத சான்றுகளில் ஒன்றாக ஒளிர்கிறது.
பிரிட்டனை சார்ந்த ஆய்வாளார் டாக்கர் ஜெஸ்டின் குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில் ஈடு பட்டிருந்தார் சில ஆண்டுகள் தொடர்ந்த அவரது ஆய்வில் குழந்தைகள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டிறிந்தார்.
பிறக்கும் குழந்தைகள் தனது தாய் மற்றும் தந்தை மற்றும் தன்னை சார்ந்தவர்களின்கொள்கை களையும் கோட்பாடுகளையும் பார்க்காத நிலையிலும் அறியாத நிலையிலும் வேறு எந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போதிக்க படாத நிலையிலேயும் வளர்க்க பட்டால் அப்படி வளர்க்க பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் ஏகத்துவம் மட்டுமே குடிகொண்டிருக்கும் என்பதும் அவர் கண்டிறிந்த உண்மைகளில் ஒன்றாகும்.
ஆக இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்பது இயல்பானது. திசைதிருப்பாமலும் எதையும் போதிக்காமலும் வளர்க்கப்படுகின்ற குழந்தைகளின் உள்ளங்களில் இயல்பாகவே அது தான் குடிகொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் முடிவாகும்.
இப்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அண்ணல் நபியின் அமுதமொழியை மீண்டும் படியுங்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த அருள் மொழியில் வார்த்தைகள் சொல்லி வைத்தது போல் அளந்து பயன் படுத்தப்பட்டுள்ளது.
வளர்ப்பு முறையில் தான் குழந்தைகள் முஸ்லிமாக ஏகத்துவ வாதியாக வார்த்து எடுக்க படுகின்றனர் என்று சொல்லப்படவில்லை.
மாறாக அந்த ஏகத்துவம் இயல்பாகவே அந்த குழந்தைகளின் உள்ளங்களில் நிலை பெற்றுள்ளது வளர்ப்புமுறையில் தான் அந்த குழந்தைகள் மாற்று மத த்தவர்களாக வார்க்கபடுகின்றனர் என்ற அற்புதமான உண்மையை நயமாக நபிகள் நாயகம் சொல்லி உள்ளார்கள்.
ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பல்வேறு சோதனைகளை செய்து இந்த உண்மையை கண்டு பிடிப்பது பெரிய விசயமல்ல.
எந்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈடுபடாத முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இந்த உண்மையை சர்வ சாதாரணமான வார்த்தைகளில் எப்படி சொல்ல முடிந்தது.
அவர் சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எந்த அறிவு இருந்ததோ அந்த அறிவை கொண்டு மட்டுமே அவர்கள் பேசியிருக்க வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பெற்ற அறிவை அன்றே அண்ணல் நபியால் எப்படி சொல்ல முடிந்தது?!
அவர்கள் யாவற்றையும் அறிந்த படைத்தவனின் துதராக இருந்ததால் மட்டுமே இதை அன்றே சொல்ல முடிந்தது இந்த நபி மொழியும் உத்தநபியின் நுபுவத்தை உறுதி செய்யும் அற்புத வார்த்தைகளில் ஒன்றாகும்.
புகைப்படத்தில் வலது புறம் இருப்பவர்: ஆய்வாளார் ஜஸ்டீன்
இது மட்டுமல்லாது மகள் இஸ்லாத்தை ஏற்று தாய் வேறு மதத்தில் இருந்தாலும் அந்த தாய்க்கு பணி விடை செய்யச் சொல்லி நபிகள் நாயகம் அறிவுறுத்திய நபி மொழியையும் பார்க்கிறோம். மேலும் உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதமுடைய வழித் தோன்றல்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இதன் மூலம் எனக்கும் நண்பர் விஜய்க்கும் மூதாதையர் ஒருவரே! எனவே யாருடைய நல் வாழ்வுக்காகவும் தாராளமாக பிரார்த்தனை புரியலாம். இஸ்லாத்தில் அதற்கு தடையில்லை.


4 comments:

vara vijay said...

So according to you nobody has to introduce God for a child, I agree. However you have to introduce Your rasool to the child if not he will never know about him. Which will again term him as a kaffir according to suvanapriyan.

Nobody have problem in believing one God, but most of us dont need a rasool between God and me.

Dr.Anburaj said...

மடம் என்றால் கடம் என்பார்.

விஜய் தாங்கள் சொல்வது முற்றிலும் சரி.கேள்வியின் கடுமை கண்டு பதில் அளிக்க வக்கத்து சுவனப்பிரியன் உளறுகின்றாா்.
முஹம்மதுவை வளா்த்து ஆளாக்கிய அவரது மாமா அல்லது பெரியப்பா ( பெயா் முத்தாலிப் என நினைக்கின்றேன் ) முஸ்லீம் ஆக மாறவில்லை.முஹம்மதுவை நபியாக ஏற்றுக் கொள்ளவில்லை. உறவு பேணி மதித்து பழகி வந்தாா். மனிதனாக வாழ்ந்தாா்.

அவர் மரணபடுக்கையில் இருக்கும் போது அவரை பார்க்கச் சென்ற முஹம்மது அவருக்காக பிரா்த்தனை செய்ய மறு்த்து விட்டாா்.

- பெயா் நினைவில் இல்லை. தனது மிக நெருங்கிய உறவினா் ஆனாலும் முஹம்மதுவிற்கு அதிக நன்மைகள் செய்த பெரியவருக்கு அவர் முஸ்லீம் ஆக மறுத்து விட்ட காரணத்தால் அவரது முக்திக்கு பிரார்த்தனை-துஆ கேட்க - கூடியிருந்தவர்கள் கேட்டுக் கொண்டபோதும் மறுத்து விட்டாா்.

முஸ்லீம் ஆக மதம் மாற மறுத்து அரேபிய உள்நாட்டு மதத்தை பின்பற்றி வாழ்ந்த நெருங்கிய உறவினருக்காக முஹம்மது பிராத்த்தனை செய்ய மறுத்து விட்டாரே!
அதுபோல் சுஜித் வில்வன் என்ற கிறிஸ்தவ சிறுவனுக்காக முஸ்லீம்கள் பிராரத்தனை செய்வது ஏமாற்று வேலைதானே! ஹராமா ! ஹலாலா? முஹம்மதுவின் சுன்னா வா ?

Dr.Anburaj said...

'பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே'' -ஆய்வில் உறுதி! 'பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இஸ்லாமிய) இயல்பிலேயே பிறக்கின்றன வளர்ப்பு முறையில் தான் அந்த குழந்தைகள் யூதனாகவும், கிருதுவனகவும், நெருப்பை வணங்ககுடியவனாகவும் வார்த்தெடுக்க படுகின்றனர்.'' (அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2568)
----------------------------------
பதில் - இது ஒரு படிப்பு வசனையில்லாத கைநாட்டு காட்டறபியின் முட்டாள்தனமாக உளறல். சிறுவயது முதல் குழந்தைகளை எந்தவிதமான மதம் கலாச்சர சட்டங்கள் பற்றிய கருத்து எதையும் போதிக்காமல் வளா்த்தால் -கடவுள் பற்றிய சிந்தனையின்றிதான் குழந்தைகள் வளரும். இசுலாமியராக -அரேபியராக ஒரு போதும் வளராது.குழந்தைகளுக்கு இறைவன் சுன்னத் செய்து அனுப்பவில்லை.ஆண்குழந்தைகளின் குறிக்கு தொப்பி அணிந்துதான் படைத்துள்ளான். தன் வாழும் சுழ்நிிலையில் தந்தை தாய் சுற்றம் பின்பற்றும் நம்பிக்கைகள் குழந்தையையும் தொற்றிக் கொள்ளும் என்பது மட்டும் உண்மை.
--------------------------------------------------------------------------

Dr.Anburaj said...

தன் மூலம் எனக்கும் நண்பர் விஜய்க்கும் மூதாதையர் ஒருவரே! எனவே யாருடைய நல் வாழ்வுக்காகவும் தாராளமாக பிரார்த்தனை புரியலாம். இஸ்லாத்தில் அதற்கு தடையில்லை.
-----------------------------------------------------
பதில்.பொய்.இசுலாம் தடுக்கின்றது.முஹமதின் சுன்னா தடுக்கின்றது முஹம்மதின் மாமா அல்லது பெரியப்பா ஒருவா் முஸ்லீமாக மாற மறுத்து விட்டாா்.சாகும்வரை அரேபிய மதத்தை பின்பற்றினாா். முஹம்மதுவை நபி -ரசுல் என்று ஏற்று அவரது அரசியல் கட்சியில் இணையவில்லை.அவர் மரண தருவாயில் இருக்கும் போது பார்க்கச் சென்ற முஹம்மது அவருக்காக பிரார்த்தனை செய்ய மறுத்து விட்டாா்.
தன்னை நபியாக ஏற்றுக் கொள்ளாத எவனையும்
முஹம்மது உயிருடன் விட விரும்பமாட்டாா்.