Followers

Thursday, June 25, 2020

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.


நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.


அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.


என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.


இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.


துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.


அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.


உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..

இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.

அன்பு ராஜ் என்ற வாழ்நாள் அடிமை ரவி சங்கரை பார்த்தாவது திருந்தட்டும்.


1 comment:

Dr.Anburaj said...

ஏற்கனவே பலமுறை ஓட விட்டுஒய்ந்து போன கிராமபோன் தட்டை
மீண்டும் ஓடவிட்டுள்ளது முட்டாள்தனம்.

சில வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வெளிவரும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை- இந்துக்களை - இந்தியர்களை மதிப்பிட முடியாது என்று சவுதி அரேபியா மற்றம் அரப நாடுகள் முடிவெடுத்து வெகு நாட்கள் ஆகி விட்டது.

சீனாவின் பொருட்களை வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுக்க முடியுமா ? இன்றைய நிலையில் மத்திய மாநில அரசால் கூட முடியுமா ? தகவல் தொடா்பு சாதனங்கள் கணினி உதிரிப் பாகங்கள் சீன தயாரிப்புகளே.கடுமையான சோதனைதான்.

முஸ்லீம்கள் கடையில் வாங்கக் கூடாது என்பவன் முட்டாள். அதுபோன்ற முட்டாள்கள் ஹிந்துக்களை -காபீர்களை தாழ்த்த வேண்டும் அழிக்க வேண்டும் என்கிறவர்கள்- முஸ்லீம் சமூகத்திலும் நிறைய பேர்கள் உள்ளார்கள் என்பது உண்மை.

தன்னை சுற்றி இருக்கும் சமூதாய மக்களை புறக்கணித்து யாரும் வாழ்ந்து விட முடியாது.

வேறு ராகம் பாடுங்கள் சு...ன்.