Followers

Wednesday, June 03, 2020

முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..?

இந்து முஸ்லிம் ஒற்றுமை
முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..?
கத்தார் பழ மாணிக்கம் விளக்கம்..!
எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்? என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.
இதோ என் பதில்!!
அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம்! எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம்! என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள்! ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்!
*அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம்
"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்; கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்"* என்பதால்
*காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி,
நோயாளிகள் பதற,குழந்தைகள் துடிக்க ,குடிசைகள் எரிய காரணமாவதால்
தீபாவளியை,அவர்கள்கொண்டாடுவதில்லை
இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?இதனால் யாருக்கு என்ன நட்டம் ?
மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*
*வீதிகளை அடைத்து,நீர் நிலைகளை மாசுபடுத்தும்,பக்திக்காக அல்லாமல் மதவாத
சக்தியைக் காட்டும் அரசியலாக மட்டுமே
இருப்பதால் இந்துதுவா விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் பங்கெடுப்பதில்லை !*
இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?
சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை ! போகியின் பெயரால் தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களை, ஒலைச்சுவடிகளை எரிக்கச் சொல்லி அவர்களை வரலாற்று அனாதையாக்கிய இந்துதுவா நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள்.
படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதால்,ஆயுதங்களை வணங்கும் ஆயுத பூஜையிலும் காகிதங்களை வணங்கும் சரஸ்வதி பூஜையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை !இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல !
தீமைகளின் தாய் மது என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் அவர்கள் மது அருந்துவதில்லை! ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை ! இதனால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !
வட்டி என்பது ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்பதால் அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது ! அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை ! அவர்களால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே !
மேலும் பெண்ணின் அழகு என்பது அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் அவர்களின் பெண்கள் பர்தா அணிகிறார்கள் ! இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள்! இதனால் யாருக்கு என்ன நட்டம் ?
*குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல !
இல்லாதவர்க்கு வழங்குதலும் இறைவனை வணங்குதலும் தான் இஸ்லாமியப் பண்டிகை என்பதால் அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அவர்களும் உண்டு, நண்பர்களுக்கும் வழங்கி ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள் !*
*அவர்களது மார்க்க சட்டப்படி
அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி
அவர்களது சொத்துக்களை பிரிக்கிறார்கள் !
அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !
அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !
இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !
இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*
ஒன்றே குலம்! ஒருவனே இறைவன்!! என சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்! இதில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை !ஆனால் எல்லா சமூகங்களிலும் உணர்ச்சியால் உந்தப்பட்டு வன்முறையை கையில் எடுக்கும் சிலர் இருப்பது போல் இங்கும் இருக்கின்றனர் ! எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லை!மற்றவர்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்தாத மீடியாக்கள் முஸ்லிம்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்துகின்றனர் .
ஆகையால் அவர்களின் போக்குகளில் தலையிட்டு அவர்களை வம்புக்கு இழுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையையாவது உணர்ந்து செயல்படுங்கள். இல்லையேல் சமூக அமைதி சீரழிந்து நாடு நாசமாகும்.


3 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம்களுக்கு இருப்பது ஹிந்துபோபியா - காபீர் ஒழிப்பு திட்டம்.

இதற்கு காரணம் முஸ்லீம்கள் அல்ல. அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கும் முஹம்மது என்ற அரேபிய ராணுவ தளபதிதான் காரணம். அவரது தவறான போதனை- தவறாக பதிவு செய்யப்பட்டும் இருக்கலாம் - தான் காரணம்.

இந்தியாவில் அரேபியனாக எண்ணத்தாலும் சிந்தனையாலும் பழக்க வழக்கத்தாலும் ........ அரேபிய அடிமையாக வாழ்வதுதான் சிறப்பு மோட்சத்திற்கு வழி என்று நம்புவதால் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றார்கள்.

மஹம்மது இந்தியாவில்பிறந்திருந்தால்
இந்து பெயரைத்தான் தனக்கு வைத்திருப்பாா்.
இந்து தலைவார்கள் பெயரை தன் குழ்ந்தைகளுக்கு வைத்திருப்பாா்.

முஹம்மதுவின் மனைவிமார்கள் அனைவரும் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருப்பார்கள்.

இராமாயாணம் படித்த காரணத்தால் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்ந்திருப்பாா்.
தனது பேரன் பேத்திகளுக்கும் இந்தியாவில் பிறந்த ஆன்மீக சமூக சமய தலைவா்கள் பெயரைத்தான் வைத்திருப்பாா்.
இராமாயாணம் மகாபாரதம் பகவத்கீதை படித்திருப்பாா்.
யோக சாஸ்திரம் பயின்றிருப்பாா். யோகாசனங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பாா்.
சைவ உணவைத்தான் உண்டிருப்பாா்.
போா் செய்து பிறரைக் கொன்று குவித்திருக்கமாட்டாா்.
பெண்களை குமுஸ் -அடிமைகளாக்கி சந்தையில் விற்று பணம் சம்பாதித்து இருக்க மாட்டாா்
போரில் தோற்ற வீரா்களின் குடும்ப பெண்களை கண்ணியமாக நடத்தியிருப்பாா். அவர்களை வைப்பாட்டியாக வைக்க பொது அனுமதி அளித்திருக்க மாட்டாா்.
உமது வலக்கறம் கைப்பற்றிய பெண்கள் உமக்கு ஹலால் என்ற குரான் வசனம் வந்திருக்காது.
யுத்தத்தில் கைபற்றிய பெண்கள் எத்தனை பேர்களை வேண்டுமானாலும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளங்கள் என்ற குரான் வசனமும் வந்திருக்காது.
53 வயதில் ஆயிசா என்ற 9 வயது குழந்தையை திருமணம் செய்திருக்க மாட்டாா். அந்த குழந்தையை தனது காம் உணா்ச்சிகளுக்கு வடிகாலாக பயன்படுத்தியிருக்க மாட்டாா்.
சௌதா என்ற மனைவி தனது நாட்களை ஆயிசாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டிய இழிநிலை வந்திருக்காது.
தான் இறைவனின் தூதா் என்று சொல்லியிருக்க மாட்டாா்.சமய பணி செய்தால் தன்னை இறைவனின் அடியாா் என்றே கருதியிருப்பாா். வாள் கேடயம் எடுத்திருக்க மாட்டாா்.
சிலை ஒழிப்பு சீா்திருத்தம் என்ற பெயரில் மனித தலைகளை கொய்திருக்கமாட்டாா். மனிதத்தைஇழந்து சீர்திருத்தத்தை செய்திருக்க மாட்டாா்.
சொர்க்கத்தில் இறைவன் ஒவ்வொரு ஆணுக்கும் 72 பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ள கொடுப்பாா் என்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் 72 ஆண்களை செக்ஸ வைத்துக் கொள்ள கொடுப்பாா் என்று போதித்து இருக்க மாட்டாா்.
சொர்க்கம் நரகதம் பற்றிய பல கற்பனைக் கதைகளை பதிவு செய்திருக்க மாட்டாாா்.
அகண்ட பாரம் இயல்பாக இருந்திருக்கும்.

Dr.Anburaj said...


இன்றைய தினமல்ா் படித்தீர்களா
ஐ.நா சபை அறிக்கை

ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 6500 பேர்கள் உள்ளார்கள்

என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...


முஸ்லீம் பெண்களை வாழ்த்துகிறேன்.பாராட்டுகிறேன். இந்து பெண்களுக்கு நல்லறிவு புகட்ட அமைப்பு இல்லாததைக் கண்டு வேதனை அடைந்தேன்.
----------------------------------------------------------------------------------------
முகநூலில் படித்தது.

தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.

அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.

வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,

" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.

வைரங்களை எங்கு எடுப்பாய்?

பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

முத்துக்களை எங்கு எடுப்பாய்?

கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

தங்கத்தை எங்கு எடுப்பாய்?

சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "

என்னை உற்று நோக்கியவராக,
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.

உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..
பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்

பொக்கிஷங்களை பொத்திப்பாதுகாப்பதே
அறிவார்ந்தவர் செயல்

அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்

பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்

பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்....

#அனைத்து_சகோதரிகளுக்கும்_சமர்ப்பணம்