Followers

Sunday, June 07, 2020

டி.எம்.மணி அவர்களைப் பற்றி சுப வீர பாண்டியன்!

டி.எம்.மணி அவர்களைப் பற்றி சுப வீர பாண்டியன்!
இங்கு குறிப்பிடப்படும் திருப்பனந்தாள் டி.எம்.மணி அவர்களை 20 வருடங்களுக்கு முன்பிருந்தே அறிவேன். எங்கள் ஊரில் முதன் முதலாக ஏகத்துவ பொதுக் கூட்டம் அறிமுகப்படுத்தும் போது பிஜே, பாக்கர், டி.எம்.மணி போன்ற மூவரையும் சிறப்பு பேச்சாளர்களாக அழைத்திருந்தோம். காவல்துறை கெடுபிடி, ஊர் மக்களின் எதிர்ப்பு, மார்க்க அறிஞர்களின் எதிர்ப்பு என்று ஏகத்துக்கும் எதிர்ப்பு. கூட்ட மேடை அமைப்பதற்கே தெரு மக்கள் விடவில்லை. பிறகு நான் அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டு வந்த ஆட்களை பள்ளம் தோண்டச் சொன்னேன்.
கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த கூட்டத்துக்குப் பிறகுதான் ஏகத்துவ பிரசாரத்துக்கு இருந்த எதிர்ப்பு ஓரளவு குறைந்தது. அந்த கூட்டத்தில் திரு டி.எம்.மணி அவர்களிடம் பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அவருடைய மகனும் கூட்டத்துக்கு வந்திருந்தார். இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து என்ற பெரியாரின் ஆலோசனைக் கேற்ப தனது பெயரை உமர் ஃபாரூக் என்று மாற்றிக் கொண்டு இஸ்லாமியராக வாழ்ந்தார். பிறப்பால் சனாதன மதம் தந்த இழிவையும் துடைத்துக் கொண்டார்.


No comments: