Followers

Wednesday, June 24, 2020

இஸ்லாமாபாத்தில் அமைய இருக்கும் கிருஷ்ணன் கோவில்!

இஸ்லாமாபாத்தில் அமைய இருக்கும் கிருஷ்ணன் கோவில்!
பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அவர்கள் தங்கள் மத கடமைகளை செய்ய புதிதாக ஒரு கோவில் கட்டிக் கொள்ள அனுமதி வேண்டினர். பாகிஸ்தான் அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. மத விவகாரங்களுக்கான அமைச்சர் நூருல் ஹக் இதற்கான உத்தரவை பிறப்பித்து 20000 ஸ்கொயர் ஃபீட் நிலத்தை ஒதுக்கியுள்ளார். 10 கோடி ரூபாய் அரசு செலவில் இந்த கோவில் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் கூறினார்.
Islamabad: The Hindu community living in the Pakistan capital will soon get a temple and a crematorium. Currently, Hindus in Islamabad have to travel out of the city to perform religious rituals.
The Krishna temple will be constructed on a 20,000 sq ft plot at Islamabad’s H-9 sector area. The Islamabad Hindu Panchayat has named the temple as Shri Krishna Mandir.
According to Religious Affairs Minister Pir Noorul Haq Qadri, the government will bear the construction cost, presently estimated to be Rs 10 crore.
timesnownews
சன் நியூஸ்
25-06-2020
இஸ்லாமிய தேசம் என்று அறியப்படும் பாகிஸ்தானில் அரசு செலவில் கோவில் கட்டித்தரப்படுகிறது. ஆனால் மத சார்பற்ற நாடு என்று நம்மைக் கூறிக்கொண்டு இஸ்லாமியருக்கு சொந்தமான பாபரி பள்ளியை 'அங்குதான் ராமர் பிறந்தார்' என்ற பொய்யை கூறி இடித்து தரை மட்டமாக்கினர் சங்கிகள். பிறகு நீதி மன்ற உத்தரவையும் பொய்யாக பெற்று ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம். ஒரு இடத்தை திருடி அதில் ராமர் கோவில் கட்டினால் அந்த நாடு விளங்குமா? என்பதை பெரும்பான்மை இந்துக்கள் சிந்திக்க வேண்டும். பாபர் பள்ளி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களே முதலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.


1 comment:

Dr.Anburaj said...

இன்று எல்லா பத்திரிகைகளிலும் இந்த செய்தி வந்துள்ளது. படித்து மகிழ்தேன். இந்துக்கள் சந்தோஷமாக வாழ மேலும் நிறைய அரசு திட்டங்கள் தேவை.பாக்கிஸ்தான் அரசு சர்வதேச கண்டனங்களுக்கு கடுமையாக ஆளாகி வருகின்றது.

இந்து அழிப்புக்கு அமெரிக்க அரசு ஐநா சபை என்று அடுக்கடுக்கான கண்டனங்கள் பிறந்து தாக்கியது. வேறு வழியின்றி புலி புல்லைத் தின்பது போல் பாக் அரசு இந்துக்களை காட்டி கண்டனங்களில் இருந்து தன்னை பாதுகாக்க வழி தேடி இந்த கோவிலைக் கட்ட அனுமதித்துள்ளது. ரூ.10 கோடி அரசு பணம் கொடுப்பதாக அறிவித்தள்ளது.
------------------------------------------------------------------------------
1947 ல் ஹிந்து கோவில்கள் எத்தனை இருந்தது ? அவைகள் என்ன ஆனது ?
அந்த இந்து கோவில்களில் இருந்த விலை உயா்ந்த பொருட்கள் என்ன ஆனது ?
ஹிந்து கோவில்களுக்கு நிலங்கள் சொத்துக்கள் இருந்தது. அவைகள் என்ன ஆனது ?

ஹிந்துக்களை படுகொலை செய்து ஹிந்து ஆலயங்களை அழித்து ஹிந்து ஆலய நிலங்களை

சொத்துக்களை பலவந்தமாக பிடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுத்த சங்கதிகளின் மொத்த மதிப்பு என்ன ? எத்தனை லட்சம் லட்சம் கோடி பெறுமே ?

பாக். அரசு கொடுக்கும் பணம் ரூ10 கோடி .... பிச்சை காசு. 10 காசுக்கு கூட சமமாகாது.
----------------------------------------------------------------------------------
சர்வதேச நிா்பந்தங்கள் பாக்கிஸ்தானை குனிய வைத்துள்ளது.

திரு.நரேந்திர மோடி என்ற பேராண்மை - இந்திய அரசின் மிகக் கடுமையான

நடவடிக்கைகள் பாக்கிஸ்தானை குனிய வைத்துள்ளது.

திரு.நரேந்திர மோடி என்ற பேராண்மை செய்த தவத்திற்கு கிடைத்த வரம்.