Followers

Tuesday, May 17, 2016

யூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் ஒரே குலத்தை சேர்ந்தவர்களா?



எகிப்தியர்கள் ஒரு காலத்தில் இனத்தால் யூதர்கள். தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்யும் எகிப்தியர்களின் தோற்றமானது நம்ம ஊர் பிராமணர்கள் அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும்.

அரபு மொழி பேசுபவர்களிலேயே எகிப்தியர்களை மற்ற அரபுகளுக்கு பிடிக்காது. காரணம் தாங்கள் பேசும் அரபு மொழிதான் ஒரிஜினல் என்பார்கள்: மற்ற அரபுகளை விட எகிப்தியர்களான நாங்கள் தான் சிறந்தவர்கள் என்பார்கள்: தாங்கள் முன்னுக்கு வர கூட இருக்கும் பலரையும் கீழே தள்ள தயங்க மாட்டார்கள்: அலுவலக வேலைகளையே தேடிப் பிடிப்பர். அறிவில் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்ற மமதை இன்றும் இருக்கும்.

இந்த காரணங்களால் சவுதி, துபாய், குவைத் அரபுகளுக்கு எகிப்திய அரபுகளை சுத்தமாக பிடிக்காது.

முதன் முதலாக வேலைக்காக நான் அலுவலகத்தில் நுழைந்த போது எனக்கு சீனியராக ஒரு எகிப்திய அக்கவுண்டண்ட் இருந்தார். ஆனால் எனது முதலாளிக்கு என்னை மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம். எனவே அலுவலக டெலிபோன்கள் நான் தான் எடுக்க வேண்டும். அலுவலகத்தின் முக்கிய சாவிகள் என்னிடம் தாம் இருக்கும். பணம் சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் கண்டிப்பாக எனது கையெழுத்தும் இருக்க வேண்டும் என்று எனது ஓனரின் கட்டளை. இது காலித் என்ற அந்த எகிப்தியருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. எனக்கு பல டார்ச்சர்களை கொடுக்க ஆரம்பித்தார். ஒரு முறை கைகலப்பே ஏற்படும் நிலை வந்தது.

இதை நான் சொல்லக் காரணம் எகிப்தியரின் தான்தான் அறிவில் சிறந்தவன் என்ற மமதையே இது போன்ற செயல்களுக்கு காரணம். நம் ஊர் பிராமணர்களுக்கும் இது பொருந்தி வரும். ஒரு இந்து மத சகோதரர் எனது வாதங்களை உண்மைப்படுத்துவது போல் பல தகவல்களைப் பகிர்ந்தார். நம் ஊர் பிராமணர்கள் எங்கிருந்து வந்து நம் நாட்டில் குடியேறினர் என்பதை மிக அழகாக விவரிக்கிறார். பதிவு சற்று நீளமாக இருந்தாலும் படித்துப்பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

1) மோசே முனிவன் மலையேறிப்போய் பத்துக் கட்டளையுடன் வருவதற்குள் ஒரு தங்கக் கன்றுக்குட்டியை ’பிரதிஷ்ட்டை’ செய்து அதை உருவ வழிபாடு செய்த ‘விலக்கப்பட்ட’ கோத்திரத்தினைச் சேர்ந்தவர்களும், பின்னர் மோசேவால் துரத்தப்பட்டு கைபர் போலன் வழியாக வந்து வேதகால மதத்தினை உருவாக்கியவர்களின் வழித்தோன்றலல்லவா, ..... விட்டகுறை தொட்டகுறையாக, பாசம் இருக்கும்தானே?

2) அந்த தங்கக் கன்றுக்குட்டிதான், காமதேனுப் பசுவாக வளர்ந்து பரிணமித்தது. கருவரைக்குள் செல்ல ஆரான் கோத்திரத்துக்கு மட்டுமே அனுமதியுண்டு. அப்படி உள்ளே சென்ற ஜக்கரியா, உள்ளே சென்றபின் தான் மயங்கிவிட்டால் இதைப் பிடித்து இழுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போவான். அவன் மார்பின் “குறுக்கே கட்டப்பட்டிருக்கும்” கயிற்றில்தான் அந்தக் கயறு இணைக்கப்பட்டிருக்கும்! அதாவது, “மார்பின் குறுக்கே கயறு அணிந்தவர்கள் மட்டுமே” கருவரைக்குள் செல்ல முடியும்! அந்த ஜக்கரியா, இயேசுவுக்கே ஞானஸ்தானம் அளித்த யோவான்ஸ்தானகனின் தந்தை. தான் ஆடாவிட்டாலும் அரவிந்தனின் சதையாடுமல்லவா?

3) அடுத்த ஜென்மாவில் ஏன் யூதனாகப் பிறக்க வேண்டும், திரு அரவிந்தன்? நீங்கள் இந்தப் பிறவியிலேயே யூதர்தான்! ரெண்டு பக்கம் தோரா ஓதிவிட்டு, Israel's Law of return ஐப் பயன்படுத்தி, ஜெருசலேம் சென்று Jewish Quarter ல் செட்டிலாகி விடுங்கள்! வருடத்திற்கு மூன்று மாதம் அவர்களே பயிற்சியளித்து, யூஸி சப் மெஷின் கன்களும் கொடுப்பார்கள்! ஆசைதீர பாலஸ்தீனியர்களை நோக்கிச் சுடலாம்!

4) அரவிந்தன், உங்கள் விபூதி எப்படி வந்தது தெரியுமா? ஆதிகால யூதர்கள் கொழுத்த கிடாயினை பலியிட்டு, பலிபீடத்தில் அவைகளைப் பொசுக்கி இறைவனுக்கு அவியளித்தபிறகு, “நெற்றி நிலத்தில்பட விழுந்து வணங்குவார்கள்” சுற்றிலும் தெரித்த சாம்பல், நெற்றியில் படுமல்லவா? பலிபீடம் போய் வந்தவன் எனும் செறுக்கை ஊருக்குள் பறைசாற்றிட, நெத்தியில் திருநீறு அடையாளம் வந்தது! நம்புங்கள் அரவிந்தன், நீங்கள் இப்போதே யூதர்தான்! இஸ்லாமிய எதிர்ப்பு என்பது, ஒரு கூடுதல் தகுதிதானே? smile emoticon

5) அவியிடுதலையும், விலங்குகளை பலியிடுதலையும் வேதகால ஹிந்துக்கள் தங்களுடன் கொண்டுவந்தனர். இது வெகுகாலம் நீடித்தது. வேதங்களே சாட்சி. இதைக் கெடுத்தவர், புத்தர். புத்தரின் அஹிம்சாவாதம் மக்களிடையே பெறும் வரவேற்பினைப் பார்த்த ஹிந்துக்கள், விலங்கு பலியினை தவிர்த்தார்கள். அதோடு சேர்ந்து, “வேள்வியின் நாயகர்களாகிய பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மாமிஸ உறுப்புகளும் காணாமல் போனது. என்ன இருந்தாலும் முன்னோர்களின் “பததியை” விட்டுவிடக்கூடாதல்லவா? அதற்காக...

6) விலங்கு பலிக்கு மாற்றாக, ஒரு குறியீடாக, “ஒரு சாஸ்திரத்திற்காக” தேங்காய் உடைக்கப்பட்டது! **பின்னமான ஆட்டை யூதன் வெட்ட மாட்டான்! குடுமி போன தேங்காயை அர்ச்சகர் உடைக்க மாட்டார்! **ஆட்டை உரித்ததும், (கிருமி நாசினியாக) மஞ்சள் பூசப்படும். தேங்காய் உடைபட்டதும், மஞ்சள் பூசப்படும்! **ஆட்டை பலியிட்டதும் ஒரு கால் உடைக்கப்பட்டு அதன் வாயில் வைக்கப்படும். தலை, பூசாரிக்கு! தேங்காயை உடைத்ததும் அதன் குடுமி உரிக்கப்பட்டு அந்தப் போர்ஷனை (மூடியை) அர்ச்சகர் எடுத்துக்கொள்வார்! **வெட்டுப்பட்ட ஆட்டின் தலையை ஒரு கையிலும், உடைபட்ட தேங்காயின் “இரு கண் ஒரு வாய் மூடியை” மறு கையிலும் வைத்துப் பாருங்கள்? இரு புத்த முகங்கள், உங்களைப் பார்த்துச் சிரிக்கும்! அரவிந்தன், நீங்கள் இந்தப் பிறவியிலேயே யூத வாரிசுதான்

7) உலக இனங்களிலேயே “கோத்திரங்கள் வாயிலாக தம்மைப் பிரித்து அடையாளப்படுத்திய” இரு இனங்கள் எவையெவை? எனக்குத் தெரியவில்லை, நீங்கள் சொல்லுங்கள் அரவிந்தன்? பனிரெண்டு யூதக் கோத்திரங்களில் தம்மில் கரைந்து மறைந்த எட்டுக் கோத்திரங்களை வரலாற்றில்மட்டும் வைத்துக்கொண்டு, இப்போது நான்கு கோத்திரங்களை மட்டும் பேரளவிற்கு வைத்துக்கொண்டிருப்பவர்கள் யூதர்கள். யூதர்களையும், ஹிந்துக்களையும் தவிர (குறிப்பாக பிராமணர்கள்) இந்த பேருலகில், “கோத்திரங்கலை” இன்னமும் வைத்துக்கொண்டிருப்பவர்கள் யார்? அரவிந்தன், நீங்களும், நானும், கோபாலனும் விலக்கப்பட்ட, கரைந்துபோன, வலசை போய்விட்ட (Diaspora) ஒரு கோத்திரத்தின் யூதராக இருக்க வாய்ப்புள்ளது! smile emoticon அய்யோ பாவம்,

8) இந்த மாபெறும் உலகில், ஆண்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி (உடற்கூறுகளால் அல்ல, வயது, சாதகம் பார்த்து) உறவினர்களை அழைத்து, விழாக்கொண்டாடும் இரண்டே இரண்டு இனங்கள் எவை? எனக்குத் தெரிந்து Bar Mitzwa (Please google for details) கொண்டாடும் யூதர்களும், பூணூல் பண்டிகையை (யூத ஜக்கரியா பூசாரியின் குறுக்குக் கயிர்) கொண்டாடும் பிராமணர்களும் மட்டுமே! பார்மிட்ஸ்வா எனும் யூதப் பண்டிகை, ஆண் பிள்ளைகள் 12, 13 வயதானபோது உறவினர்களை அழைத்து “மத ரீதியாகக்” கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பர்த்டே பார்ட்டிபோல நண்பர்களை அழைப்பதில்லை. பூணூல் கல்யாணத்திலும் நண்பர்களுக்கு அழைப்பு ரொம்ப சொச்சம்தான். பார்மிட்ஸ்வா பற்றி, ஹெரால்ட் ராபின்ஸின் (இவர் ஒரு யூதர்) A stone for Danny Fisher ல் அருமையாகச் சொல்லியிருப்பார்,

9) மோஸே ராஜ வம்சம், மரபல்லாத வழியில் பிறந்தவன். கர்ணன், ராஜ வம்சம், மரபல்லாத வழியில் பிறந்தவன். மோஸேவைக் கொல்வதில் ராஜகுமாரிக்கு விருப்பமில்லை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். கர்ணனைக் கொல்வதில் ராஜகுமாரிக்கு விருப்பமில்லை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். மோஸே, புறசாதிகளோடு சேர்ந்துகொண்டு துஷ்டனாக ஆனான். கர்ணன், புறசாதிகளோடு சேர்ந்துகொண்டு துஷ்டனாக ஆனான். மோஸே, சேனாதிபதியாக நின்று ”தான் பிறந்த யூத இனத்தை” வழிநடத்தினான். கர்ணன், சேனாதிபதியாக நின்று ”தான் பிறந்த ஷத்திரிய” இனத்தை வழி நடத்தினான். மோஸே போர்க்களத்தில் “பின்னர் லெஜண்டாக பரிணமிக்கப்போகிற” பல அதிசயங்களைச் செய்தான். கர்ணன், போர்க்களத்தில், அதேபோல் அதிசயங்களை நிகழ்த்தினான். கதை ஒன்றே! களம் இரண்டு! என் பாட்டனின் நாடாகிய இஸ்ரேலே! உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (காந்தி, இஸ்ரேல் மேண்டேட்டில் இந்தியாவை எதிர்த்து ஓட்டுப்போடச் சொன்னார். எனவே, ஒரு இந்தியனாக, அரசியல் ரீதியாக நான் காந்தியின் பக்கமே)

10) ”ஈஸா எனும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை துளிர்த்துத் தழைக்கும். அந்நாளின் ஈஸாவின் வேருக்காக சாதிகள் தேடி விசாரிப்பார்கள்” என்று இயேசுவின் வருகையை முன்னறிவித்த ஏசாயா தீர்கதரிசியும், “ராமாவிலே சத்தம், ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாமையால் மன ஆறுதல் இல்லாமலிருக்கிறாள்” என்று முன்னறிவித்த இன்னொரு தீர்கதரிசியாகிய எரேமியாவும், பலப்பல இடங்களில், பழைய ஏற்பாட்டில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். “உங்கள் (விக்கிரஹ ஆராதனை செய்யும் விலக்கப்பட்ட கோத்திரத்தார்) அமாவாஸைகளும், நாள் (குறித்த) திருநாட்களும் எனக்கு அருவருப்பு என்று கர்த்தர் (இயேசு அல்ல! அவர் பிதாவே என்றழைத்த ஜெஹோவா எனும் ஏக இறைவன்) சொல்கிறார்” இவ்விருவர் தவிர பல்வேறு பழைய ஏற்பாட்டின் யூத தீர்கதரிசிகளும் “தூபங்கட்டுதலை” இழிவாகப் பார்க்கிறார்கள். 1) அமாவாசை வழிபாடு 2) குறித்த திருநாட்கள் (அதிகளவில், அநேகமாக வாரந்தோரும்) 3) தூபங்கட்டுதல் (தீபாராதனை) இன்னமும் வைத்துக்கொண்டிருக்கும் மதம் எது?

11) ஜஸ்டிஸ் கட்சி - திக - திமுக - அதிமுக - மதிமுக என்று பிரிந்துகொண்டே செல்வது, மானுட இயல்பு. பெறும்பாலும் கொள்கையை கட்டுடைக்க நினைப்பவர்களும், அதிகாரம், வாய்ப்புக் கிடைக்காதவர்களும் சேர்ந்து வெர்ட்டிகலாக கட்சியை உடைத்து வெளியேறுவதுதான் வரலாறு. **எரேமியாவும், ஏசாயாவும் ஆதிப் பழங்குடி மனப்பான்மைகலைக் கட்டுடைத்தார்கள். தீர்கதரிசனங்கள் (விஷன்ஸ்) முன்மொழியப்பட்டன. **மோஸே பத்துக் கட்டலைகளை இயற்றி மேலும் கட்டுடைத்தார். (எகிப்தைவிட்டு) வெளியேறினார். **விக்கிரஹ ஆராதனை, சில கோத்திரத்தாருக்கு இர்ரெஸிஸ்டிபிளாக, இனிப்பானதாக இருந்தது. பிரிந்து போனார்கள். **வானத்தைப் பார்க்காதே, நாள் நட்சத்திரம் குறிக்காதே என்றார் மோஸஸ். வான சாஸ்திர அறிவியல் மனது, கட்டுக்கடங்காமல், கட்டுடைத்தது! **வான சாஸ்திரமும், விக்கிரஹ ஆராதனையும், பசு வழிபாடும், என்ணிலடங்கா திருவிழாக்களும் வேண்டுமென்று ஆசைப்பட்ட சில குறுங்குழுக்கள், ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு வெளியேறின! எங்கே சென்றன? யாருக்குத் தெரியும்?

------------------------------------------------

அவை வேறு எங்கும் செல்லவில்லை... ஆநிரைகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் வந்து அமர்ந்து கொண்டன. இங்கு அமர்ந்ததோடு அல்லாமல் இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை பாகிஸ்தானுக்கு போ என்று வேறு கூப்பாடு போடுகின்றன. :-)


இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகூப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய இறைத் தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்றும் கூறுங்கள்.

குர்ஆன் 2:136

மத நல்லிணக்கத்திற்கு இதை விட சிறந்த ஒரு வேத வசனம் வேண்டுமா? மேலே பதிந்த பல சம்பவங்களை உண்மைப் படுத்துகிறது இந்த குர்ஆனிய வசனம்!

6 comments:

Dr.Anburaj said...

இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை பாகிஸ்தானுக்கு போ என்று வேறு கூப்பாடு போடுகின்றன.
பொய் சொல்லாதீா்கள் சுவனப்பிாியனே. தாங்கள் அரேபிய அடிமை.

பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்களை துரத்தி கொன்று ஒழித்து விட்டீர்களே ?
5 கோடிக்கு அதிகமான இந்துக்களை -(ஆப்பானிஸ்தான் பாக்கிஸ்தான் பங்களா தேஷ் பகுதியில் வாழ்நத இந்துக்கள்) கொன்று இனப்படுகொலை செய்தது யாா் ? நேரடி நடவடிபக்கை என்று கற்பழிப்பு கலவரம் நவகாளி அட்டுழியங்களை நிறைவேற்றியது யாா் ?
பங்களாதேஷ் நாட்டில் தொடா்நத இந்தக்கள் கொல்லப்பட்டு வருகின்றாா்களே ? என்ன செய்யலாம்.

மோன் சோவிசாக் என்று 75 வயது புத்த துறவி தொண்டை அறுபட்டு - இசுலாமிய பண்பாடு -அரேபிய காடையா்கள் IS இப்படி தொண்டையைத்தான் அறுப்பாா்கள்.

நிலப்பரப்பு கடல் எல்லைகளும் 10000 ஆண்டுகளுக்கு முன்னா் வேறுபட்டு இருந்தது. மனித நாகரீகங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றது உண்மையே.

இன்று இந்தியா என்ற நாடு உருவாகி செயல்பட்டு வருகின்றது. இந்த மண்ணில் வாழும் அனைவரும் மண்ணின் மைந்தா்கள்தாம். இந்த மண்ணில் வாழும் இஸ்ரவேலைச் சார்ந்த யுதா்கள் உள்ளாா்கள். ஈரானைச் சோ்ந்த பாா்சிகள் உள்ளாா்கள்.பழமையைக் காட்டி சாதி சண்டையை மூட்ட வேண்டாம். தங்கள் திட்டம் பலிக்காது
பல சாதிமக்கள் சோ்ந்து உருவானதுதான் அய்யங்காா் என்ற பிறாமண சாதி என்பதை தாங்கள் அறிந்து கொள்ளுங்கள்.அய்யங்காா்கள் போற்றும் நம்மாழ்வாா் பிறப்பில் அய்யங்காரா ? கிடையாது.நாடாா் அல்லது யாதவராக இருக்கலாம் என்கின்றாா்கள்.
பிறாமணா்கள் என்ற சாதி கலாச்சார பாிணாமத்தில் இந்திய பிற சாதிமக்களில் இருந்துதான் உருவானது என்பதை ஆயிரம் கோவிலில் சத்தியம் செய்து ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தா் கூறுகின்றாா்.
உங்களின் கருத்து முட்டாள்தனமானது.முழுவதும் தவறானது. கெட்ட நோக்கம் கொண்டது.

பிறமத அழிப்புதான் குரானில் கொள்கை.மத நல்லிணக்கம் என்ற வாா்த்தை குரானில் இல்லை.குரான் அதை அந்நியமாக கருதுகின்றது.
A 75-year-old Buddhist monk has been hacked to death inside a temple in Bangladesh, police said.

The body of Mongsowe U Chak was found on Saturday at the isolated temple where he lived alone in Naikkhangchhari village in Bandarban, about 338km (211 miles) southeast of the capital Dhaka, police said.

Police said they did not know the motive of the killing and no one had been arrested.

The killing followed similar murders of two prominent gay activists, a law student, a Hindu tailor and a university professor in April.

“His body was found with a slit throat. P

Dr.Anburaj said...


இந்து மதத்தின் இந்திய ஆன்மீக இயக்கங்களின் நோக்கம் மனிதனை அந்தணணாக்குவது-பிறாமணன் ஆக்குவதுதான் என்று சுவாமி விவேகானந்தா் ஓங்கி உரைக்கின்றாா். அதுதான் உண்மை. காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் கலாச்சார பாிணாமத்திற்கு இன்றும் ஆளாகி வருகின்றான். ஆக மனிதன் ஒருநாள் பிறாமணன் -அந்தணன் ஆகித்தான் தீர வேண்டும் அதுவரை இயற்கை அவனை விடாது என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

சுவனப்பிாியன் யுதா்கள் ஆதாமின் பிள்ளைகள் இல்லையா ? ஏன் இந்த அரேபிய அடிமைத்தனம்.யுதா்கள் மேல் வெறுப்பு.

Dr.Anburaj said...


His body was found with a slit throat.

slit throat. குரல் வளையை கத்தியால் சிறியதாக வெட்டி கொலை செய்வது அரேபிய பண்பாடு. முஹம்மதுவின் காலத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது.

Dr.Anburaj said...


குரானன் படித்தவன் யோக்கியதை.

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து அர்ச்சகர் படுகொலை:3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல

First Published : 08 June 2016 12:19 AM IST

வங்கதேசத்தில் -கிழக்கு பாக்கிஸ்தானில்70 வயது ஹிந்து அர்ச்சகர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

அந்த நாட்டில் ஹிந்து அர்ச்சகர் படுகொலை செய்யப்படுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கோபிநாத் காஞ்சிலால் கூறியதாவது:

ஜினைதா மாவட்டத்தைச் சேர்ந்த நோல்டாங்கா கிராமத்தில், கோயில் அர்ச்சகர் ஆனந்த கோபால் கங்குலியை அடையாளம் தெரியாத 3 பேர் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குப் படுகொலை செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், அர்ச்சகரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.

இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர்.

இதுகுறித்து ஜினைதா மாவட்ட காவல்துறைத் தலைவர் அல்தாஃப் ஹுசேன் கூறியதாவது:

ஏற்கெனவே பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ள தாக்குதல் பாணியிலேயே அர்ச்சகர் ஆனந்த கோபால் கங்குலியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு தனிப்பட்ட முறையில் விரோதிகள் எவரும் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.

எனவே, இது பயங்கரவாதத் தாக்குதல் என்றே சந்தர்ப்ப சாட்சியங்கள் தெரிவிக்கின்றன என்றார் அவர்.

நோல்டாங்கா கிராமக் கோயில் அர்ச்சகரான ஆனந்த கோபால் கங்குலி, பூஜை மேற்கொள்வதற்காக அந்தக் கோயிலுக்கு தனது மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழி மறித்துத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

மர்ம நபர்கள் முதலில் அர்ச்சகரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும், பிறகு கத்தியால் கழுத்தை அறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வங்கதேசத்தில் சிறுபான்மையினரும், முற்போக்குவாதிகளும் படுகொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வணிகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி பாபுல் அக்தரின் மனைவியை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மற்றொரு ஹிந்து அர்ச்சகரை வெட்டிக் கொன்ற பயங்கரவாதிகள், அவரைக் காப்பாற்ற வந்த பக்தரை சுட்டுக் காயப்படுத்தினர்.

பெரும்பாலான தாக்குதல்களுக்கு "இந்தியத் துணை கண்டத்துக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.)' அமைப்பு பொறுப்பேற்றது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுப் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து டாக்கா காவல்துறை செய்தித் தொடர்பாளர் மசூதுர் ரஹ்மான் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் அமைப்புக்கு எதிராக, காவல்துறைக் கண்காணிப்பாளர் பாபுல் அக்தர் தலைமையிலான போலீஸ் படை டாக்காவில் திங்கள்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டது. அப்போது அந்த அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மற்றொரு பயங்கரவாதியைக் கைது செய்து, அருகிலிருந்த இன்னொரு பதுங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில், முன்னதாகக் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி குண்டு பாய்ந்து இறந்தார் என்றார் அவர்.

இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய காவல்துறைக் கண்காணிப்பாளர் பாபுல் அக்தரின் மனைவியை ஜமாதுல் முஜாஹிதீன் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ViswaVenkat said...

poda poramboku.. Mohammad unga kadavula.. makka la irundhu madhina ku odi pona punnaku thana avan.

Evlo pondatinga.. Actually neenga la oringal muslim ilai. uyirkagavum, money kagavum kadavulai marandhu sathan pakkam sendra drogigal.

Neenga unga podatingala slave ah thana use panringa. ungaluku thevai sex. so adhuku etha madhiri oru amaipu. adhuku peru islam. Studpid islam

சந்திர மௌலி said...

சுத்த பொய் என்பதை உலகம் நன்றாக அறியும்....மிகவும் கேவலமான பதிவு