Followers

Tuesday, May 05, 2020

சுஜாதாவின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..?

சுஜாதாவின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..?
அவற்றில் எப்போதும் ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும்..!
எங்கிருந்து வந்திருக்கும் சுஜாதாவுக்கு இந்த தேடல்..?
இது சுஜாதா அப்பாவின் ஜீன்...!
சுஜாதாவின் அப்பா சீனிவாச ராகவன் தீவிர வைணவர்...!
வைணவத்தின் புனித நூல் “நாலாயிர திவ்யப் பிரபந்தம்”.
ஒருநாள் சுஜாதா நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை , தன் அப்பாவுக்கு படித்துக் காட்டிக் கொண்டு இருந்தாராம் கேட்டுக் கொண்டே இருந்த சுஜாதாவின் தந்தைக்கு என்ன தோன்றியதோ, திடீர் என்று சுஜாதாவை அழைத்து இப்படி சொன்னாராம் :
“குர்ஆன் படிக்கலாம் ! அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா !"
ஆச்சரியப்பட்டுப் போன சுஜாதா ,
அடுத்த நொடியே புத்தகக் கடைக்குப் புறப்பட்டுப் போய் விட்டாராம்...!
“தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்”
இந்தப் புத்தகத்தை வாங்கியும் வந்து விட்டார் சுஜாதா.அப்புறம்..?
சொல்கிறார் சுஜாதா :
“சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.
‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்..!”
வியப்பாகத்தான் இருக்கிறது...!
ஒரு தீவிர வைணவரான சுஜாதாவின் தந்தை , குரானைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார்...!
அதை தன் பிள்ளையும் படிக்க தூண்டி இருக்கிறார்..!
குரானைப் படித்த சுஜாதா சொல்கிறார் :
“திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.
பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் 2003)
“எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன !
அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை..!
அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான்
வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.”
வாட்ஸ்அப்பில் வந்த பதிவு....
----------------------------------
நான் சிறுவனாக இருக்கும் போது ஆனந்த விகடன் வாரா வாரம் வீட்டுக்கு வரும். அப்போது அதில் சுஜாதாவின் தொடர்கதைகள் தொடர்ந்து வரும். அதனை படிப்பதற்கென்றே விகடனை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். 'கரையெல்லாம் செண்பகப்பூ', கணேஷ், வசந்த் தொடர்கள், மற்றும் கம்யூட்டர் சம்பந்தமாக அவர் எழுதிய பல கட்டுரைகள் மிக எளிய தமிழில் இருக்கும். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்கள் அவரது கதையை மேலும் மெருகேற்றியிருக்கும். தமிழ் வாசிக்கும் ஆர்வத்தை சுஜாதாவின் எழுத்துக்கள் என்னுள் உருவாக்கியது என்றால் அது மிகையில்லை.


2 comments:

Dr.Anburaj said...

சுஜாதா மிகவும் அபாரமான அறிவு மிக்கவா்.சில வேளைகளில் சிலா் வீண் விவாதங்களை விரும்ப மாட்டார்கள். நானும் பொது வெளியில் இப்படித்தான் பேசுவேன். ஆனால் முஸ்லீம் நண்பர்கள் என்னிடம் திகபாணியில் ஏதாவது சொன்னால் பொறிந்து தள்ளுவேன்.

வலக்கரம் கைபற்றிய பெண்கள் ஹலால் என்ற வசனத்தை சுஜாதா படிக்கவில்லையா ?
யுத்தத்தில் கைபற்றிய பெண்கள் எத்தனை பேர்களை வேண்டுமானாலும் குமுஸ் அடிமைப் பெண்களாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களொடு திருமணம் செய்யாமல் பால்உறவு வைக்கலாம் என்கிறதே அசிங்கமான குரான்.

அரேபிய காட்டுமிராண்டிகள் தங்கள் செயலுக்கு சாதகமாக எழுதி க் கொண்ட ஒரு புத்தகம் குரான். இது வேதம் அல்ல. இறைவன் கொடுத்ததும் அல்ல.

Dr.Anburaj said...

ஒரு பெண் சற்று தளா்வாக ரவிக்கை அணிந்திருந்தாளாம். அதை சுஜாதா வர்ணிக்கும் போது சாக்குப் பையினுள் இரண்டு புனைகளை கட்டிப் போட்டதுபோல் அவள் முலை துள்ளி விளையாடியது என்று எழுதியினருந்தா்ா்.

இதற்காக தமிழகமெங்கும் வாசகர்கள் அவரை கண்டித்தார்கள். நானும் கண்டித்து கடிதம் எழுதினேன்.

பணத்திற்கு எழுதுபவனுக்கு குரானாவது திருவாள்மொழியாவது. பணம் கிடைக்கும் என்றால்
நாய் குண்டியில் தேன் தடவினாலும் நக்க நிறைய பேர் இருக்கின்றார்கள்.

சுஜாதாஎப்படியோ?