Followers

Sunday, May 31, 2020

மன அமைதியை தருகின்ற இல்லற வாழ்க்கை!

மன அமைதியை தருகின்ற இல்லற வாழ்க்கை!
இறையருளை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக மூன்று நபர்கள், கூடுதலாக வணக்கம் புரிய முடிவு செய்தனர். அதில் ஒருவர், இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இரண்டாம் நபர், ஒருநாள் விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்றார். மூன்றாவது நபர், நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்; ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்றார்.
இந்தச் செய்தி நபிகள் நாயகம் அவர்களுக்குத் தெரிய வந்தபோது, "அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக.... உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டு விடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன் ஆகவே என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். (நூல்கள்: புகாரி 5063, முஸ்லி
"நபித் தோழர் உஸ்மான் பின் மழ்ஊன் அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் அவர்கள் அனுமதியளிக்கவில்லை" (அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீ வாக்காஸ் , நூல்கள்: புகாரி (5074), முஸ்லிம் (2715)


1 comment:

Dr.Anburaj said...

துறவறம் திருக்குறளில் மதிக்கப்படுகின்றது.இயேசு துறவு வாழ்க்கையை வாழ்ந்தாா். சிலருக்கு அந்த பரிபக்குவம் இயல்பிலேயே பிறப்பிலேயே இருக்கின்றது. அதாவது துறவு விதிவிலக்குதான்.விதி அல்ல.அனைவரும் பின்பற்ற முயன்றால் வீபரீதம்தான்.அகோரி நாகா சந்நியாசிகள் இதற்கு உதாரணம்.துறவு சீரழிந்து போனதற்கு உதாரணம் அகோரிகள்.

துறவியாக வாழ்ந்தால் சுவாமி விவேகானந்தா் போல் வாழவேண்டும்.

இல்லையேல் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும்.

அதாவது ஸ்ரீராமன் காட்டிய இராமாயாண வழி.

முஹம்மது அவர்களின் போதனை வெகுஜன மக்களுக்கு நியாயமானதுதான்.
சரியானதுதான். யுத்தம் செய்ய போனால் கூட சீட்டு குலுக்கி ஒரு மனைவியை அழைத்துச் செல்லும் உத்தம புருஷா் அவர் அல்லவா .ஒரு இரவு கூட மனைவியை பிரிந்து வாழ வில்லை.
-------------------------------------------------------------
நாம் அனைவரும் பல நிலைகளில் துறவு அனுஷ்டிக்கின்றோம். வீட்டில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு என்றால் சொத்துக்களை விற்று வைத்தியம் பார்க்கின்றோம். அதுவும் ஒரு துறவு நிலைதான். செக்ஸ் எண்ணங்கள் தலை தூக்குவதில்லை.அதுவும் ஒரு துறவுதான். சில கடினமாக பணிகளை மேறகொள்ளும் போது செக்ஸ் மறந்து விடும்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்ற பாடலில்

பாதையோ வெகு தூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலை யாா் மனம் தேடும்.

உயா்ந்த ஒன்றுக்காக சிறந்த ஒன்றை விரும்பி
இழக்கும் போது நாமும் விவேகானந்தர்தாம்.