Followers

Thursday, May 21, 2020

எல்லையோரத்தை அடைந்ததும் அனுமதி மறுக்கப்படுகிறது..

எல்லையோரத்தை அடைந்ததும் அனுமதி மறுக்கப்படுகிறது..
குவைத் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நுழைவாயிலை அடைத்து விட்டனர்..
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக யாருக்கும் குவைத்திற்குள் வர அனுமதி இல்லை..
இந்த புகைப்படத்தில் இருப்பவர் எகிப்து நாட்டை சேர்ந்த கனரக வாகன ஓட்டுனர்..
உள்ளே வர முடியாமல் அங்கேயே எல்லையிலேயே தங்கி விடுகிறார்..
கையில் இருந்த உணவு குறைகிறது தண்ணீர் தட்டுப்பாடு..
முகநூலில் ஒரு நேரலை பதிவு போடுகிறார்..
நான் எகிப்து நாட்டை சேர்ந்தவன் உங்கள் நாட்டிற்குள் வரும் வழியில் கொரோனா காரணமாக எல்லை அடைக்கப்பட்டு விட்டது..
அங்கேயும் போக முடியாமல் இங்கேயும் வர முடியாமல் தவிக்கிறேன் எனக்கு உதவுங்கள் என குவைத் மன்னருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்..
பதிவு வெளியான சில மணி நேரங்களில் குவைத் பாதுகாப்பு படையினர் எல்லைக்கு விரைந்து சென்று அவரை குவைத்திற்குள் வர அனுமதித்து ஊரடங்கு முடியும் வரை தங்குவதற்கு இடம் உணவு வழங்கி உதவியுள்ளனர்..
என் தேசத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை இங்கே ஒப்பிட்டு வருந்துகிறேன்..


No comments: