Followers

Sunday, May 03, 2020

உயிரற்ற வேதியியல் பொருட்களில் மின்னல் தாக்கியதால் உயிர் உருவானதா?

உயிரற்ற வேதியியல் பொருட்களில் மின்னல் தாக்கியதால் உயிர் உருவானதா?
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. (ஒருவர் கேட்டுள்ள பின்வரும்) இந்த விடயம் பற்றிய உண்மை நிலை என்ன என்பதை பற்றி சற்று தெளிவு படுத்தமுடியுமா?

// Raj Siva
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆக்ரோசமாகப் பூகம்பப் பிரதேசமாகப் பூமி பிரளயித்துக் கொண்டிருந்தபோது, சற்றுக் காலத்தின் முன் உருவான நீரினில் தாக்கிய ஒளிக்கீற்று ஏற்படுத்திய ஏதோவொரு இரசாயனக் கூழ்நிலை, முதல் உயிர் வடிவத்தைத் தோற்றிவித்தது. உயிரே இல்லாத ஒரு வேதியல் கலவையிலிருந்து உயிர் தோன்றியிருக்கிறது. சரியான இடத்தில், சரியான சூழ்நிலையில், சரியான நேரத்தில் நடந்த தற்செயல் விளைவினால், இன்று உயிரெனும் மாபெரும் ஆற்றல் விரிவடைந்து போயிருக்கிறது.
உயிரில்லாத வேதிப் பொருளிலிருந்து எப்படி உயிர் தோன்றியது என்பதே அறிவியலால் இன்றுவரை விளக்க முடியாத பெருங்கேள்வி. இதற்கான பதில் யாருக்கும் தெரியாது.
//
-----------------------------------
பதில்:
வ அலைக்கும் சலாம். உயிர் உருவானது எப்படி என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று கூட பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது­ இல்லை. அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், உயிர் தோற்றம் (எப்படி என்பது இன்னும்) மர்மமாகவே இருக்கிறது. எந்தளவிற்கு என்றால், பூபியில் உயிர் தோன்றியிருக்க வாய்ப்பில்லை, பூமிக்கு வெளியே இருந்து தான் உயிர் வந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்லும் அளவிற்கு குழப்பம் நீடிக்கிறது.
வேதியியல் கலவையுடன் மின்னல் சேர்ந்து உயிர் உருவாகி இருக்கலாம் என்பது அந்த பல்வேறு கோட்பாடுகளில் ஒன்று. நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலேயே அந்த சகோதரர் இதுக்குறித்து கூறும் போது, "உயிரில்லாத வேதிப் பொருளிலிருந்து எப்படி உயிர் தோன்றியது என்பதே அறிவியலால் இன்றுவரை விளக்க முடியாத பெருங்கேள்வி. இதற்கான பதில் யாருக்கும் தெரியாது" என்கிறார்.
அதுதான் அறிவியலால் விளக்க முடியவில்லையே, அப்புறம் எப்படி இதனை உண்மையென்று நம்புகிறீர்கள் என்று நாம் திருப்பி கேட்டால் பதில் இருக்காது. இது தொடர்பில் ஆய்வகத்தில் கூட இந்த கோட்பாட்டை நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஒரு வேளை அப்படி நிரூபிக்கப்பட்டிருந்­தால், உயிர் தோற்றம் குறித்து இன்று வேறு பல கோட்பாடுகள் உருவாகியிருக்காது. இது தொடர்பில் நான் எழுதிய "தற்செயலாய் வீடு உருவாகுமா?" என்ற கட்டுரை மேலும் பல புரிதல்களை உங்களுக்கு கொடுக்கலாம். நிச்சயம் பாருங்கள். படிக்க: http://www.ethirkkural.com/2010/08/blog-post_07.html?m=1
ஆக, இந்த வேதியியல்/­மின்னல் கோட்பாடு நிரூபிக்கப்படாததும், உண்மையில்லாததும் ஆகும்.
நன்றி.

சகோ Aashiq Ahamed ன் பதிவிலிருந்து..... காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.


3 comments:

Dr.Anburaj said...

இந்தியாவில் -ஹிந்து மதத்தில் இது போன்ற கருத்துக்கள் காணக்கிடைக்கின்றது. வேதாந்தம்
பரமாத்தா பிரகிருதி ( இயற்கையாகி) இயற்கை சத்வம் ரஜேஸ் தம குணங்களாக பேதமாகி பின் பரிணாமம் பெற்று உயிர் தொகுதிகள் உருவானது என்று கருத்துள்ளது.
1.விஷ்ணு அவதாரம் மச்ச அவதாரம் -கடலில் வாழும் உயிா்
2.கூா்ம அவதாரம் நிலத்திலும் நீரிலும் வாழும் உயிா்
3.வராக அவதாரம் நிலத்தில் வலிமையோடு போா்குணம் மிக்க உயிராக பரிணாமம் அடைதல்
4.நரசிம்ம அவதாரம் - மனிதன் -மிருகம் இடைப்பட்ட நிலை
5. பரசுராமன் மனிதனில் ஆக்ரோசகுணம் மிக்க நிலை இதுவும் மனிதப்பண்புகள் குறைந்த நிலைதான்.
6. ஸ்ரீவாமன அவதாரம் இதுவும் பரிணாமத்தில் மேம்பட்ட நிலை
7. கிருஷ்ண அவதாரம் -இது மிகவும் மே்படுத்தப்பட்ட நிலை .
8. ஸ்ரீராமர் அவதாரம் - இது மிகவும் மே்படுத்தப்பட்ட நிலை .
9. கல்கி அவதாரம் - இது மிகவும் மே்படுத்தப்பட்ட நிலை .

கடவுளின்அவதாரம் என்பது நபித்துவம் போல் ஒரு விவாதத்திற்குரிய ஒரு கே்ளவிதான்.கடவுள் மனிதனாக பிறப்பாரா என்று கேள்வி கேட்டால் கடவுள் மனிதனை நபியாக அனுப்பினாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது.ஆனால் இன்று நவீன உலகம் உருவாது பற்றிய விவாதங்கள் அறிவியல் வாதிகளின் கருத்துக்களுக்கு இணக்கமாக உள்ளது என்பது படிக்க ஆச்சரியமாக உள்ளது.

மேலும் திருவாசகத்திலல் சிவபுராணத்தில்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

என்ற பாடல் வரிகள் இந்து மதம் பரிணாமக் கொள்கையை ஆதரிக்கின்றது என்பதற்கு நிரூபணம் ஆகும்.
பரிணாமக் கொள்கை ஆன்மீகத்திற்கு இணக்கமானதே.பரிணாமக் கொள்கை இந்துவின் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.சமய உணா்வை உறுதிப்படுத்துகின்றது.

கிறிஸ்தவ அரேபிய மதங்கள்தாம் பரிணாமக் கொள்கையைக் கண்டு ஒன்றுக்கு அடிக்கின்றன.

Dr.Anburaj said...

இறைவன் நபிமார்கள் உலகிற்கு நல்வழிகாட்ட அனுப்புகின்றான் என்பது பொய்யான வாதம்.
01.மஹம்மது தன்னைதான் நபிஎன்று அறிவித்துக் கொண்டாா். அதற்கு நிரூபணம் ஏதும் கிடையாது. தேவதூதனை பார்த்தவா்கள் பேசியவர்கள் வேறுயாரும் கிடையாது.
02.124000 நபிமார்களை உலகிற்கு அனுப்பியிருக்கின்றான் என்பது பச்சை பொய்.
03.இஸரேலிய அரேபிய நாடுகளில் மட்டுமே நபிமார்கள் என்று கருத்துள்ளது. பிற நாடுகளில் நபி என்று யாரும் பிறந்ததாக சரித்திரம் இல்லை.
04.அமெரிக்காவில் ஆஸதிரேலியாவில் இப்படி எல்லா நாடுகளில் நபி என்று யாரும் பிறந்ததாகவோ தங்களை இறைவனின் தூதா் என்று அறிவித்துக் கொண்டதாவோ சரித்திரம் இல்லை.124000 பேர்களில் யுத கிறிஸ்தவ அரேபிய சமயங்களில் நபிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் 12 பேர்கள் இருக்கலாம். 124000 பேர்களில் மீதி பேர்கள் எங்கே? அவர்கள் அளித்த வேதம் எங்கே ? சீனா மங்கோலியா ஆண்டார்டிகா ஆப்பிரிக்கா அந்தமான போன்ற இடங்களுக்கு நபி என்று யாரும் போனதில்லை.பிறந்ததில்லை. அதற்கு எந்த சரித்திர சமூக வியல் ஆதாரம் கிடையாது.
05.முஹம்மதுவின் அடுத்த அண்டபுளுகு சொர்க்கத்தி்ற்கு பயணம். அன்றிரவு முஹம்மது தனக்கு திருமணம் பந்தம் இல்லாத உம்முஹரானி என்ற பெண்ணின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் உடன்படுத்தவர்கள் தூங்கி விட்டபின் சென்றிருக்கின்றார். சொர்க்கத்திற்கு குதிரைக்கும் கழுதைக்கும் இடைப்பட்ட ஒரு மிருகம்-இறக்கை உள்ளது -புறாக்கு - தன்னை அழைத்துச் சென்றதாக பீலா விடும் முஹம்மது காற்றுள்ள இடத்தில் பறக்கதான் சிறகுகள் பயன்படும். சொர்க்கம் -நகரம் செல்ல காற்றின் துணை -இறக்கைகளின் துணை தேவை என்பது முட்டாள்தனம். சொர்க்கம் -நரகம் இரண்டும் புமிக்கு உயரத்தில் உள்ளது என்ற நப்பிக்கைபடி கதை கட்டப்பட்டுள்ளது. சொர்க்கம் -நரகம் இரண்டும் புமியின் காற்று மண்டலத்திற்குள் அமைந்துள்ளதா ? இல்லை.
06. முஹம்மது அங்கே பார்த்ததாக சொல்லும் அனைத்தும் கட்டுக்கதை. அங்கு 124000 நபிகளை அவர் பார்த்திருக்க வேண்டும்.ஆனால் யுதர்கள் கிறிஸ்தவர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட 12 நபிமார்களை மட்டும் அவர் பார்த்து அவர்களுக்கு இவா் தலைமை தாங்கி தொளுகை நடத்துகின்றார் என்று சும்மா அள்ளி விடுகின்றார். நாளைக்கு 50 வேளை தொளுகை என்று இறைவன் விதித்தானாம் ? இறைவன் முட்டாள் ? ஆனால் மஹம்மது அறிவாளிபோல் 5 வேளைதான் தொளுகை என்று இறைவின் பல மட்டங்களில் பேசி அனுமதி பெற்றாராம். நியாயத்தீர்ப்பு நடக்காத நிலையில் சொர்க்கம் நரகம் இரண்டும் காலியாகத்தானே இருக்க வேண்டும்.அனால் நரகத்தில் அவர் கண்ட காட்சிகள் அனைத்தும் அண்டப்புளுகு.
-----------------------------------------------------------------------------------
07.இந்துமதம் மனிதன் படிப்படியாக பரிணாமம் அடைகின்றான் என்றே சொல்கிறது. ஆன்மீகம் என்ற பரிடசை - பரிணாமம் சதா நடந்து கொண்டேயிருக்கின்றது.அதில் சதம் எடுத்துவர்கள் எப்போதும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.மாறாக இருக்கலாம். ஆனால் 100ஃ100 எடுத்த மனிதர்கள் உலகில் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள் என்பது இந்து மதத்தின் கருத்து. குறிப்பாக இந்தியா என்ற பகுதியில் இந்த பரிணாமம் சிறப்பாக நடந்துள்ளது.எனவே இங்கு பண்பாடு ஞானிகள் அதிகம்.
அதனால்தான் முஹம்மது என்ற அரேபிய தளபதி பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே கௌதமன்என்ற அன்பின் வடிவத்தை இந்த மண் பிரசவித்துள்ளது. அபேிய காடையர்கள் மஹம்மதுவால் தூண்டப்பட்டு உலகை கொடும் போர் நடத்தி இரத்தக்களறியில் குடும்ப பெண்களின்கடல் அளவு கண்ணீரில் நீந்தி அரேபிய கலாச்சாரத்திற்கு உலகில் கணிசமாக பகுதியை அடிமையாக்கியிருக்கின்றார்கள்.ஆனால் கௌதமா் அன்பினால் ....அன்பினால் ....அன்பினால் சீனா ஜப்பான் தாய்லாந்தி மலேசியா இலங்கை..மங்கோலியா போன்ற உலகின் கணிசமாக பகுதியை வென்றாா்.இரத்தம் ஆறாக ஓடவில்லை.பெ்ண்கள் கண்ணீா் வடிக்கவில்லை.அடிமை சந்தைகள் பெண்களால் நிறையவில்லை. அந்தப்புரங்கள் பெண்களால் நிரம்பி வழியவில்லை. கௌதமருக்கும் முஹம்மதுவிற்கும் உள்ள வேறுபாடு பரிணாமம் தான்.மஹம்மது பரிணாமத்தில் பல நிலைகள் கீழ்படியில் இருப்பவர்.

Dr.Anburaj said...



நான் உண்மையை பதிவிட்டேன்.வெளியிட்டமைக்கு நன்றி.

எனக்கு வருத்தம்.
இந்த இணையத்தில் பங்கேற்ற ஆட்கள் இல்லையே ஏன் ? ஆதரித்தோ எதிர்த்தோ பதிவுகள் வருவதேயில்லை.ஏன் என்பது விளங்கவில்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே