Followers

Monday, May 18, 2020

தீண்டத்தகாதவர்களாக எப்போது மாறுகிறார்கள் - தோழர் மதிவாணன்

தீண்டத்தகாதவர்களாக எப்போது மாறுகிறார்கள் - தோழர் மதிவாணன்
'அந்த காலத்தில் பண்ணையார்கள் தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தலித்களுக்கு செத்த மாட்டை கொடுத்து விடுவார்கள். ஆடு, கோழி இவைகளை பண்ணையார்கள் சாப்பிட்டு விட்டு இறந்த மாடுகளை தூக்கிச் செல்ல தலித்களை பணிப்பார்கள். இந்த இறந்த மாடுகளை தலித்கள் சாப்பிடுவதால்தான் அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சாதி இந்துக்கள் ஒதுக்கி வைத்தனர். எனவேதான் அம்பேத்கார் இறந்த மாட்டை சாப்பிட வேண்டாம் என்று சொன்னார் தலித்களை நோக்கி'
'ஹலால் முறை என்பது என்ன? உயிரோடு உள்ள ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இறைவன் பெயரைச் சொல்லி கழுத்தில் அறுத்து அதன் இரத்தத்தை வெளியேற்றுவது. இவ்வாறு இரத்தம் வெளியேற்றப்பட்டால் அந்த உயிரினத்தை ஏதேனும் நோய் தாக்கியிருந்தாலும் ரத்த்தில் சென்று விடும். அது ஆரோக்கியமானதும் சுத்தமானதும் கூட.'
'இப்போது ஒரு தலித் முஸ்லிமாக மாறினால் அவர் இறந்த மாட்டையோ, ஆட்டையோ சாப்பிட மாட்டார். சுத்தமான உணவுகளை ஹலால் முறையில் உண்ணுவதால் சமூகத்தில் இருந்த தவறான புரிதலான தீண்டத்தகாதவர் என்ற இழி சொல்லும் நீங்கி விடுவதைப் பார்க்கிறோம். இதுதான் பிஜேபியினருக்கு எரிச்சலாகிறது. இதனால்தான் ஹலால் முறையை எதிர்க்கின்றனர் இந்துத்வாவாதிகள். பன்றியை விட மாட்டை ஹெச் ராஜா போன்றவர்கள் பிரதானமாக எடுத்துக் கொள்வதன் காரணமும் இதுதான். இது நாள் வரை நமக்கு அடிமையாக இருந்தவன் இஸ்லாமியனாக மாறி சுதந்திரமானவனாக மாறுவதா? என்ற கோபத்தில்தான் அதற்கு மூல காரணமான இஸ்லாத்தின் மீது பாய்கின்றனர் பிஜேபியினர்.'
-தோழர் மதிவாணன்
காணொளி கருத்தை எழுத்து வடிவமாக்கியது சுவனப்பிரியன்


1 comment:

Dr.Anburaj said...

இந்து முறையான ஜட்கா முறைதான் சிறந்தது

ஆட்டை அறுக்கும் போது ஒரே வெட்டில் தலையை துண்டித்து விடுவது (இந்து முறையான) ஜட்கா முறையாகும்.

இதில் அறுக்கப்படும் ஆட்டிற்கு மரண பயம் இருக்காது. அலறல் இருக்காது. வேதனை குறைவே.தனக்கு ஏதோ நடக்கப்போகின்றது என்ற உணரும் மறு கணம் அதன் தலை துண்டாகிவிடும். பயம் காரணமாக இரதத்தில் அநாவசியமாக ஹார்மோன்கள் உற்பத்தியாகாது.எனவே இறைச்சி சுத்தமானதாக இருக்கும். ஆட்டின் இரத்தம் வெளியேறாமல் இருக்காது. இதயத்துடிப்பு இருக்கும் வரை இரத்தம் வெளியேற்றப்படும்.

ஹலால்முறை

படிப்பறிவில்லாத அரேபியர்கள் உருவாக்கிய முறை. இதில் அறுக்கப்படும் ஆடு ஒட்டகத்தின் இரத்தக்குழாய் அறுக்கப்பட்டு இரத்தம் வெளியேற அப்படியே போட்டு விடுவார்கள். மூவாட்டுபுழா என்ற ஊரில் நான் இதை நேரில் பார்த்திருக்கின்றேன். ஊருக்கு வெளிபகுதியில் ஏராளமான இறைச்சிக்கடைகள் இருந்தன.எருமை மாடுகள்தான் அதிகம் வெட்டப்படும்.கால்களைக் கட்டி கழுத்தை கால்பகுதிக்கு சற்று மேல் அறுத்து விட்டு அப்படியே போட்டு விடுவார்கள். மாடு அப்படியே இரத்தம் வழிய துடித்துக் கொண்டேயிருக்கும். துடித்து .... துவண்டு .... மரண பயத்தால் திக்கி திணறி வெந்து நொந்து .....வேதனைப்பட்டு அவஸ்தை பட்டு அதன் உடலில் பயம் காரணமாக தேவையற்ற ஏராளமான ஹார்மோன்கள் உருவாகி இருக்கும்.
இரத்தம் வெளியேறிவிடும் என்பது ஒருவகை பொய்தான்.முழு அளவு இரத்தமும் வெளியேற முடியாது. பெரும் குழாய்களில் இருக்கும் இரத்தம்தான் வெளியேறும்.பயத்தினால் உருவாகிய ஹார்மோன்கள் உடல் சதை பகுதியில் வினைபுரிந்து சதையோடுதான் சோ்ந்திருக்கும்.

இந்து முறையான ஜட்கா படி அறுத்தால் ஹார்மோன்கள் இவ்வளவு உருவாகியிருக்காது.

ஹலால் முறை முட்டாள்தனமானது.கொடூரமானது.

சாவு ” என்பதன் ரூசியை அவஸ்தையை ......அறுபடும் மிருகம் வெகு .....நேரம் ....உணா்ந்து ...வெந்து...வெதும்பி சாகும்.

சைவமே உத்தமம்.சைவ உணவு போதுமானது. அசைவ உணவு தேவையற்றது. ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தும் முஸ்லீம்கள் தொளுகை வீரர்கள் தவிர்க்க வேண்டியது அசைவ உணவுகள். காட்டறபிகளை மறந்து இந்தியாவில் பிறந்த கௌதமா் வள்ளலாா் தாயுமானவரை நினைத்து முஸ்லீம்கள் தங்களது உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டுயது அவசியமானது.

இறைச்சி .....சாப்பிட்டு சாப்பிட்டு பண்பாடு மழுங்கி ஆப்கானிஸ்தானில் பிரவசவாா்டில் குண்டு வீசும் அளவிற்கு மனிதன் மிருகமாகி விடுகின்றான்.