Followers

Thursday, May 28, 2020

நேபாளம் இன்று இந்தியாவின் பகை நாடாக மாற என்ன காரணம் ?

நேபாளம் இன்று இந்தியாவின் பகை நாடாக மாற என்ன காரணம் ?
உலகின் ஒரே இந்து நாடாக விளங்கிய நேபாளம் தற்போது மதசார்பற்ற நாடாக மாறி அங்கு சீனாவின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
நேபாளம் கம்யூனிஸ்ட் பாதையை தேர்ந்தெடுக்க மிக முக்கியமான காரணம் அங்கு அதற்கு முன் இருந்த பார்ப்பனீய ஆதரவு பெற்ற மன்னர் ஆட்சிதான்.
பிறப்பை கொண்டு ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம சித்தாந்தம் செய்த அராஜகமே நேபாள நாட்டில் மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்பட்ட காரணமாக இருந்தது.
இதன் காரணமாக நேபாள சிவாலயங்களில் கடந்த 400 ஆண்டுகளாக சிவ ஆச்சாரியார்களாக இருந்த தமிழகத்தின் சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களின் அராஜகம் முடிவுக்கு வந்தது. அவர்கள் இந்தியாவுக்கு அடித்து துரத்தப்பட்டார்கள்.நேபாள கோயில்களில் மதகுருமார்கள் போட்ட ஆட்டமே இன்று நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாற காரணமாக அமைந்துவிட்டது.
நேபாள அரசியல் மாற்றம் நேர்வழியில் செல்லத் துவங்கிய அதே காலகட்டத்தில் இந்தியாவில் பாஜகவின் பார்ப்பனீய அரசு மத்தியில் அமைந்து மக்களின் வெறுப்பை தினமும் சம்பாதிக்கும் விதமாக இந்தியாவை இந்து நாடாக மாற்றும் அழிவு வேலையை செய்து வருகிறது.
இது ஒன்று போதாதா சீனா நேபாளத்தை இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடுவதற்கு ?
அது தான் தற்போது நேபாளம் எல்லை பிரச்சினையை எழுப்பி சீனாவோடு சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் "ராவணணின் வாரிசுகள்" என்றும், எனவே பாஜக சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்றும் 2002- ல் பாஜகவின் மூத்த தலைவர் L.K. அத்வானி குறிப்பிட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற கிறுக்குத்தனமான கப்சா புராணங்களை நம்பும் ஆட்சியாளர்களின் கேனத்தனமான செயல்களே இன்று இந்தியாவை சுற்றிலும் பகை நாடுகளாக மாற முக்கிய காரணம் ஆகும்.
ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... "இந்துமதம் ஒற்றை மதமல்ல..! அது பல்வேறு மதங்களை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட செயற்கை மதம்" ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரை இந்துமதம் என்றாலே அது ஆரியர்களின் வைதீக மதத்தை மட்டுமே குறித்து. வைதீகம் வர்ணாசிரம சித்தாந்தத்தை நம்புகிற மதம்.
இந்தியாவில் தோன்றாத மதங்களில் பிராமணீசம் எனப்படும் ஆரியர்களின் வைதீக மதமும் ஒன்று என்பதை இங்குள்ளவர்களே அறிமாமல் இருப்பதால் தான் அறிவை அடகுவைத்து விட்டு சூத்திர சங்கிகளாக பாஜகவுக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர்.
இந்துத்துவா முதலில் இஸ்லாமிய கிறிஸ்தவர்களை ஒடுக்கும். அதன் பிறகு இந்து என்று தன்னை நம்பிக்கொண்டு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும். இடைச்சாதிகளை தங்களது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அடிமைகளாக வைத்துக்கொள்ளும்.
"இதுதான் RSS இன் நீண்டகால திட்டம்" ஆகும்.
ஒருவேளை RSS இன் இந்த திட்டம் வெற்றி பெற்றாலும் நேபாளம் போன்றே மக்கள் புரட்சி வெடித்து குறுகிய காலத்தில் அதன் ஆட்டம் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை!
-ஜெயா தாசன்


2 comments:

Dr.Anburaj said...

தமிழர்கள் "ராவணணின் வாரிசுகள்" என்றும், எனவே பாஜக சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்றும் 2002- ல் பாஜகவின் மூத்த தலைவர் L.K. அத்வானி குறிப்பிட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பச்சை பொய்.ஆதாரங்கள் அளிக்க வேண்டும்.
இராணவன் பிறாமணன்.புராண வர்ணனைகள் குறித்து எச்சரிக்கை தேவை.
இராணவணன் தமிழனுக்கு நண்பன் பகைவன் என்பதெல்லாம் வீண் கதை.
இராவணனின் நடத்தையை மட்டும் பார்க்க வேண்டும்.
-------------------------------------------------------------------------
"இந்துமதம் ஒற்றை மதமல்ல..! அது பல்வேறு மதங்களை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட செயற்கை மதம்" ஆகும்.
ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய சுதேசி தேசிய மதங்களின் தொகுப்பே இந்து மதம். ஹிந்துஸ்தானத்தில் பிறந்து சுதேசி சமய கருத்தக்களை பின்பற்றிய அனைவருக்கும் பாரததாயின் மடியில் அமா்ந்து இருக்கின்றார்கள். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டதல்ல. ஒற்றை மதமாக இருப்பதில் சிறப்பு இல்லை. இந்துமதம் பரிணாமம் தோன்றியது முதல் உள்ளது. பரிணாமத்தின் பண்டைய அடையாளங்கள் இன்றும் நிறைய இடங்களில் காணலாம். விஞ்ஞானமும் ஒற்றை படைப்பு அல்ல.அதுவும் பல...பல பேரால் உருவாக்கப்பட்டது.மேலும் வளர பல பேரும் காரணமாக இருப்பார்கள்.ஹிந்துமதம் ஒற்றை மதமல்ல என்ற விமா்சனம் முட்டாள்தனமானது.
-----------------------------------------------------------------------------
இந்துமதம் என்றாலே அது ஆரியர்களின் வைதீக மதத்தை மட்டுமே குறித்து. வைதீகம் வர்ணாசிரம சித்தாந்தத்தை நம்புகிற மதம். இந்தியாவில் தோன்றாத மதங்களில் பிராமணீசம் எனப்படும் ஆரியர்களின் வைதீக மதமும் ஒன்று என்பதை இங்குள்ளவர்களே அறிமாமல் இருப்பதால் தான்.
வேதங்களை ஒழுங்கு படுத்தியவா் மகாபாரதத்தை எழுதியவா் வேதவியாசா் ஹிந்துஸ்தானத்தில் பிறந்தவா்.ஸ்ரீகண்ணன் ஸ்ரீராமா் போன்ற அனைத்து அவதாரங்களும் பிறந்த மண் ஹிந்துஸ்தானம். ஆதிசங்கரா் கேரளத்தில் காலடியில் பிறந்தவா்.
இந்தியாவில் தோன்றாத மதம் இசுலாம் கிறிஸ்தவம்தான். பார்பணியம் இந்தியாவில் தோன்றியதுதான்.



Dr.Anburaj said...

01) நேபாளத்தில் மீண்டும் இந்து சமயம் அரசு மதமாக மாற்றப்பட்டு விட்டது.
02) பிற மத பிரச்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
03) மதம்மாற அனுமதியில்லை.சிறை தண்டனை உண்டு.நாடு கடத்தப்படலாம்.
04) பார்ப்பனர்களுக்கும் ஆட்சிமுறைக்கும் சம்பந்தமில்லை.
05) சொந்தக்காலில் நிற்பது சிறப்பு.சிதம்பரத்தைச் சோ்ந்த பார்ப்பனர்களை இந்தியாவிற்கு அனுப்பியது நல்ல காரியம்தான்.
--------------------------------------------------------------------------------
06)மன்னா்கள் அனுபவித்த தனி உாிமைகள்தான் நேபாளத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.
07) மன்னா்களின் குடும்பத்தார்கள் சட்டத்திற்கு அப்பால்பட்டவர்களாக இருந்து பல தவறுகளைச் செய்தாா்கள்.
ஜனநாயக முறைப்படி ஆட்சியாளர்கள் தோ்வு செய்யப்பட்டு அரசு நடக்க வேண்டும். பரம்பரை உாிமை என்பது முட்டாள்தனம்.
குவைத்திலும் சவுதியிலும் இந்த மாற்றம் வர சு...ன் ஆவன செய்ய வேண்டும்.