Followers

Sunday, May 17, 2020

தமிழம் மதத் தலைவர் சீமானே!

தமிழம் மதத் தலைவர் சீமானே!
இப்படி வாரும் ஐயா!
மாட்டு கறி தின்னுகிட்டே புலால் உண்ணாமை பேசும் குறளை வேதம்னு சொல்றீங்களே.
முதலாம் சங்கத்தமிழன் ஆதி பாட்டன் சிவனை வணங்கி என்கிறாய்.
குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனை வணங்கி என்கிறாய்.
சங்கத்தமிழ் நூல் எது ஒன்றிலாவது சிவன் எனும் பெயரோ முருகன் எனும் பெயரோ உள்ளதா?
சங்கத்தமிழ் நூல் ஏதாவது படிச்சிருக்கிறாயா?
திருக்குறளாவது படிச்சிருக்கிறாயா?
அதெல்லாம் வாலி வைரமுத்து எழுதினதின்னு நினைச்சிட்டியா?
தொல்காப்பியம் மிகவும் பழமையான சங்க நூல். அதில் இலக்கண விதிகளுடன் கூடிய வாழ்வியல் இருக்கு.
அந்த தொல்காப்பியத்தில் சிவன் என்ற பெயரும் இல்லை. அடையாளமும் இல்லை.
அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு எட்டுத்தொகை கலித்தொகை நூல்களிலும் சிவனும் இல்லை. முருகனும் இல்லை.
சிவனைக்குறிக்கும் பெயர்கள் சில உள்ளது என சிவ பக்தர்கள் கூறுகின்றனர்.
அதை மூன்று வகைப்படுத்தி கூறுகிறேன்.
#A
1. ஈசன் (இறைவன் தலைவன்)
2. காலக்கடவுள் ( முக்காலமும் அறிந்த கடவுள்)
இப்பெயர்கள் ஓரிறைக்கடவுளைக்குறிக்கிறது. தொல்காப்பியன் ஓரிறை கொள்கையுடையவன் என்பதை இறுதியில் காண்போம்.
#B
3.ஈர்ஞ்சடை அந்தணன்.(ஈரமான முடியுடைய மறை காப்பாளர். தண்ணீர் கண்டால் குளிக்கும் சித்தர்கள் அனைவரையும் குறிக்கும்)
4.தாழ் சடை பெரியோன். (நீளமான முடியுடைய சித்தர்களையும் தலைவர்களையும் குறிக்கும்)
5. மணி மிடற்றான் (அழகு - முடி மார்பு- விழி உடையவன் அனைவரையும்குறிக்கும். அதாவது Mr. Madras.
#C
6. மக்கட் செல்வன் (பிள்ளை குட்டி பெற்ற எல்லா த்தையும் குறிக்கும். நிறைய பிள்ளை பெற்ற ஆதி மனிதரும் தூதருமான ஆதமைக்குறிக்கும்.)
7.நீலமேனி வாலிழைபாகத்து.( நீக்ரோ கலருடைய ஆதி மனிதன் ஆதி தூதர் ஆதமை குறிக்கும்.
8. ஆதிரையன்.( முதல் கடல் பயணம் செய்த / ஆதி திரையன்/ ஆ திரையன் / ஆதி மனிதன் ஆதமையே குறிக்கும்.
(திரையனே ருத்துரன் ஆகி -ஆதி திரையன் -அருத்தரன் ஆனது
வடமொழியில்)
இப்ப கொஞ்சம் புரிஞ்சிருக்கும். சங்க நூல்கள் சொல்வதெல்லாம் ஏக இறைவனையும் ஆதி மனிதன் ஆதமையும் தான் என்று.
(ஆதம் நபி குமரி கண்ட வாசி முதல் தமிழன்னு சொல்லியிருக்கோம்.)
இன்னும் சங்க நூல்களில் கொற்றவை / துர்கை / காளி பெயர்கள் வருகிறது.
இவை பாலைவனக்கடவுள் என்கிறது.
சங்க தமிழ் நாடான குமரியில் பாலைவனம் கிடையாது.
(அஹ்பைல் பாலைவனத்தில் (Now isreal) சபித்து இக்கப்பட்ட. இப்லீசை பாபிலோனியர்கள் பெண்ணாகவே சித்திகரித்து உள்ளனர்.
பாபிலோனிய லூசிஃபர் தான் அமெரிக்க சுதந்திர தேவி சிலை)
இங்கே துர்கை .காளி.
மறம் கடை கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே.
(தொல்காப்பியம். பொருளதிகார. புறத்திணை. இயல் சூத்திரம்.)
கொடி நிலை கந்தழி வள்ளி
என்ற.
வடு நீங்க சிறப்பின் மன்னிய மூன்றும்.
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய. வருமே.
(தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணை இயல் சூத்திரம்.)
தொல்காப்பியத்தில் ஓர் இறையும் இருக்கு.
கொற்றவை இப்லீசும் இருக்கு.
மற்றும் கொடி நிலை கந்தழி வள்ளி ஆகிய மூன்றும் இருக்கு.
#கொடிநிலை #கந்தழி என்ற இந்த பெயரும் சங்க நூலிலும் இல்லை.
கொடி நிலை என்றால் சூரியன்.
வள்ளி என்றால் சந்திரன் அல்லது வீரக்கழல் எனும் நடுகல் வழிபாடு.
கந்தழி என்றால் அண்ணனை கொன்று ஒழித்த (கந்த)அசிங்கமானவன்.
(ஆதமின் இரண்டாம் மகன்)
ஆக சூரிய கந்தழி சந்திர அல்லது நடுகல் வழி பாடு குற்றம் நீங்கிய உன்னை கடவுள் வாழ்த்தோடு ஒப்ப வைத்து எண்ணப்படும்.
கந்தழி எனும் பெயரை ஆதன் -ஆதிரையன் மகனோடு ஒப்பிடாமல் பிற்காலத்தில் வால்மீஹி ராமாயணத்தோடு இணைத்துப் பேசப்பட்டது.
வால்மீஹி ராமாயணத்திலே முருகன் என்ற பெயர் வருகிறது. குமரன் என்ற பெயர் வருகிறது.
வால்மீஹியே குமரனை கார்த்திகேயன் என்றும் ஸ்கந்தன் என்றும் அழைக்கின்றார்.
ஆனால் சீமான் வால்மீஹி பெயரைச்சொன்னால் தன்னுடைய சங்கி புராணம் தெரிந்து விடும் என்று என் முருகன் சேயோன் என்கிறார்.
தொல்காப்பியம் . குமரி நாட்டில் உள்ள நால் வகை நிலத்தின் நால் வகை மன்னர்களைப்பற்றி பேசுகிறது.
#மாயோன் மேய காடு உறை உலகமும்
#சேயோன் மேய மைவரை உலகமும்.
#வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
#வருணன் மேய பெருமணல் உலகமும்.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையாற் சொல்லவும்.
காடும் காடு சார்ந்த முல்லை நில அரசன் #மாயோன்.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நில அரசன் #சேயோன்.
வயலும் வயல் சார்ந்த மருத நில அரசன் #வேந்தன்.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில வேந்தன் #வருணன்.
(பாலை பாலை சார்ந்த நில அரசி கொற்கை)
மலைவாசி அரசன் சேயோன் என்று வருகிறது.
இவன் தான். இவனே தான். இந்த சேயோன் தான் முருகன் என்று சீமான் சொல்றாப்புல.
சேயோன் என்பதன் பொருள் சிவந்தவன்.
கருப்பான சீமானுக்கு வெளுப்பான சேயோன் எப்படி கடவுளாக முடியும்.
வெள்ளையா மீசையில்லா North india முருகனை மீசை வச்சி கருப்பு பெயிண்ட் அடிச்சி ஆம்புள மாதிரி சீமான் காட்டுனா முப்பாட்டனாயிடுமா.
சேயோனுக்கு முன்னோர்னு தமிழ் அர்த்தம் கொடுக்கிறாங்க.
பரன் + பரை = பரம்பரை.
Ok.
ஆறுபடை கட்டிய இலங்கை பிராபகரன் ஆசியோடு.
என்ன நீங்கல்லாம் ஏழாம் பரம்பரை தானா?. ஏழரைன்னாவது சொல்லணும்.
ஆறு தலைமுறைக்கு முந்திய சேயோன்.
அதாவது.
தலைமுறை
1. அப்பா
2. அப்பாக்கு அப்பா (தாத்தா)
3.தாத்தாக்கு அப்பா.
4.தாத்தாக்கு தாத்தா.
5.தாத்துக்கு தாத்தாக்கு அப்பா
6. தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தா.
மூன்று பாட்டா = முப்பாட்டன்.
7. முப்பாட்டன் சேயோன்.
அப்ப இம்புட்டு தான் தலைமுறையா.
உன்னையும் பேச விட்டு தமிழ் தமிழ்ங்கிறாங்க.
தமிழை குழி தோண்டி புதைச்சிட்டியே சீமத்தமிழா சீமானே.
மருத நிலக்கிழவனே சேயோன்.
மருத நிலவேந்தனே சேயோன். குறிஞ்சி இல்லை என்கிறார் நக்கீரர்.
திருமுருகாற்று படையில் நக்கீரன் (கோபாலு இல்லை) முருகனை வேந்தர் மரபினன் என்றும் மள்ளர் (பள்ளர்) மரபினன் என்றும் கூறுகிறார்.
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
(செய்யுள் 262)
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக
(செய்யுள் 269)
மருத குல வேந்தன். வழி வந்த இந்திர குலத்தோரே தேவேந்திர குலத்தோர். என்று இன்று அழைக்கப்படுவர்.
அப்ப முருகன்
Dr கிரிஷ்ணசாமி சமயக் கடவுளா?
சீமானின் தமிழம் சமயக் கடவுளா?
சீமா சங்கத்தமிழ்ல ஆரம்பித்து.
சாதித் தமிழுக்கு கொண்டு வந்து.
சங்கி தமிழுக்கு ஆதரவாயிட்டியே.
-அபு ஆஸியா


2 comments:

vara vijay said...

Suvanappiriyan. So Arabian slave is the solution. If you give me sun and moon in my hand to accept Islam. I can't because for me humanatarion, evolution atheism and scientific evidence are more important.

Dr.Anburaj said...

01) ஆதாம் ஏவாள் கதைக்கும் தொல்காப்பியத்திற்கும் சம்பந்தம் கிடையாது.கிறிஸ்தவ மதத்தில் உள்ள கட்டுக்கதைதான் ஆதாம் ஏவாள்கதை.வரலாறு அல்ல. உலகம் எப்படி முதலில் தடடையானது என்று நம்பி பின் உருண்டையானது என்று கண்டுபிடிக்கப்பட்டதோ அதுபோல் மனித இனம் தோன்றியது இப்படி இருக்கலாம் என்ற ஊகத்தில் - thoeretical -hypothesis - இப்படி ஒரு கட்டுக்கைதையை இஸ்ரவேல் நாட்டில் உருவாக்கியிருந்தனா். யுதர்களுக்கு அடிமையாக இருந்த அரேபியர்களும் கிறிஸ்தவர்களும் யுதர்களின் கட்டுக்கதையை அப்படியே நம்பி .... ஆயிரம் பொய்கள் பேசுகின்றனா். அரேபிய கண்மணி கூட ஆதாம் ஏவாள் கதையை அப்படியே நம்புகின்றாா்.
ஆதம் நபி யாருக்கு வழிகாட்ட இறைவன் அனுப்பினாான் ?
ஆதமும் ஏவாள் என்ற மனைவியும் ஒரு ஆண்மகன் மட்டுமே உள்ளனா்.அவர் அம்மணமாக இருந்து உபதேசித்த உபதேசம் என்ன ?லாகிலாகி இல்லல்லாஹ்என்று சொன்னாரா ? அத்தனையும் அண்டப்புளுகு.
02)பாலை என்பது சாகாரா பாலைவனமாக இருக்க வேண்டியதில்லை.2000 வருடங்களுக்கு முன்பு குமரிக்கண்டம் இருந்திருக்க வேண்டும்.அதில் பாலை நிலங்கள் - வறண்டது விவசாயம் செய்ய பொருத்தமற்றது - முரடர்கள் அதிகம் வசிக்கும் மண்ணாக இருந்திருக்கலாம்.

நஙவஞ்சகமான பதிவு.கருத்துக்கள் அனைத்தும் பொய்.

சீமான் என்ன சொல்லிவிட்டாா் என்று திடீரென்று அவர் மேல் பாயந்து விட்டீர்கள் ?