Followers

Thursday, March 31, 2016

மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’



மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’

பிஹாரில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக பகுதியளவு மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. இதற்காக அதன் மீது கடுமையான சட்டங்கள் இம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இச் சட்டத்தின்படி பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 10 வருடம் வரையும், வீடுகளில் அருந்தி விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு 5 வருடங்கள் வரையும் சிறைதண்டனை விதிக்கப்படும்.

இதன் மீது சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றிய முதல் அமைச்சர் நிதிஷ்குமார், மதுவால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களை காப்பது தம் அரசின் தலயாய கடமை எனக் குறிப்பிட்டார். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்தில் அதை அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், நிரந்தர உடல் பாதிப்பு அடைவோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன் போதை தடுப்பு மறுவாழ்வு மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக, அரசு மருத்துவர்களுக்கு பெங்களூரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ன்படி மதுவிலக்கை அமல்படுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும் எனவும் நிதிஷ் தெரிவித்தார். இறுதியில் அவர், ‘மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’ என அறிவித்தார்.

பிஹாரின் மதுவிலக்கு சட்டத்தின்படி, கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்தி சிக்குவோருக்கு 5 முதல் 10 வருடம் வரையும், தமது வீடுகளில் குடித்து விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு ஐந்து வருடம் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் 7 வருடம் சிறையில் தள்ளப்படுவர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-03-2016

1 comment:

Dr.Anburaj said...

நிலைத்து நிற்க வேண்டும். இறைவா என் மக்களை ஆசிா்வதித்துமன உறுதியை அளிப்பாயாக