Followers

Wednesday, March 16, 2016

நான் இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன்.


திரு பாலா!

//முன்னொரு காலத்தில் நீங்களெல்லாம் சுப்பனாகவும் குப்பனாகவும் மூக்காண்டியாகவும் சுப்பாண்டியாகவும் எங்களின் சகோதரர்களாக சுற்றிக்கொண்டிருந்தவர்கள் தான்.. என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள் நண்பர்களே.// BALA

நான் இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன். தேசத்தால் இந்தியன். மார்க்கத்தால் இஸ்லாமியன். இவை அனைத்திலும் எனது பங்கு சரிசமமாக உண்டு.

ஆனால் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த நான் அதே பெயரிலேயே, அதே கலாசாரத்தையும் பின்பற்றி வாழ்ந்தால் நான் இஸ்லாமியனாக மாறியதற்கு அர்த்தமே இல்லாது போயிருக்கும். சாதி விட்டு சாதி திருமணம் செய்ததால் கர்ப்பிணி பெண்ணை தாயும், சகோதரனும் மாமன்களும் சேர்ந்து அடித்து கொலை செய்து புதைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சாதி வெறி பிடித்த சமூகத்தை வெறுத்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இப்படிப்பட்ட ஒரு சாதி வெறியோடு கூடிய சமூகத்தில் நான் இரண்டற எப்படி கலப்பேன்?

http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_31.html

சாதி வெறியற்ற ஒரு சமூகமாக இந்த தமிழ் சமூகம் மாறும் போது எனது பெயரும் தமிழ் பெயராக பரிணமிக்கும். இந்த சமூகத்தோடு ஒன்றர கலக்கவும் செய்வேன். இதற்கு இஸ்லாம் எந்த தடையையும் விதிக்கவில்லை. அது வரை எனது தொப்புள் கொடி உறவுகளிடமிருந்து சற்று தூரமாக இருக்கிறேன். அவர்களின் சாதிப் பற்று என்னையும் பாதித்து விடாமல் இருப்பதற்காக!

அதீத தமிழ் பற்றால் இன்னும் அதிகமாக இந்து சமூக பழக்க வழக்கங்களோடு நான் கைகோர்த்தால் கிறித்தவத்தை ஆரியம் விழுங்கியது போல் இஸ்லாத்தையும் விழுங்கி விடும். எனவேதான் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறேன்.

2 comments:

Dr.Anburaj said...

முறையாக சமய கல்வியை அளித்தால் சாதி மோதல்களுக்கு தீா்வு காண முடியும்.

சாதி மோதல்களில் ஈடுபடுபவா்கள் அனைவரும் இந்துக்கள் என்று மனதில் நிலை நிறுத்தும்

போது இதற்கு தீா்வு பிறக்கும். இந்து கலாச்சாரத்தில் உள்ள உன்னத கருத்துக்கள் மக்களை சென்று அடையவில்லை. இசுலாம் என்பது ஒரு தொளுநோய் போல. இந்தியாவிற்கு தேவையில்லை.

” கிறித்தவத்தை ஆரியம் விழுங்கியது போல் ” எனபது பொய்யான கருத்து.

கிறிஸ்தவம் இந்தியாவில் சிறந்து விளங்குகின்றது. கிறிஸ்தவா்களில் கல்வி அறிவு மிக்கவா்கள் மிக அதிகம்.ஏராளமான பள்ளிகள் கல்லூாிகள் என்று இவர்களது ”பலம்- தொண்டு ”அபாரமானது.

தங்களது கருத்து தவறாது. பொய்யானது.போலியானது. அரேபிய அடிமைத்தனத்திற்கு எந்த சாயம் புசினாலும் எடுபடாது.

ஜாகிர் ஹீசைன் said...

தாங்கள் எப்படி டாகடர் MBBS அல்லது?