Followers

Wednesday, March 23, 2016

என்ன ஒரு ஆக்ரோஷமான கோஷம்! - கன்ஹயா குமார்!



டெல்லி ஜேன்யூ வளாகத்தில் மாணவ மாணவிகள் நடத்திய போராட்டம்! மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். அந்த மாணவர்களிடம் இந்துத்வாவுக்கு எதிராக தீ கொளுந்து விட்டு எரிகிறது. சில நாட்களாக இந்துத்வா வெறியர்களின் வெறிப் பேச்சுக்களைக் காணோம். இந்த மாணவர்களின் எதிர்ப்பே அவர்களை ஓடி ஒளியச் செய்திருக்கிறது. இந்த போராட்டம் நாடு முழுக்க விரிவடைய வேண்டும். மோடியும் அமீத்ஷாவும் அவர்களது குண்டர் படைகளும் ஆட்சியை விட்டு இறங்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. இந்த மாணவர்கள் மறந்தும் கூட 'வந்தே மாதரம்' என்றோ 'பாரத் மாதா கீ ஜே' என்றோ கூறூததை கவனியுங்கள்.

இவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். போலி தேசபக்தர்களான இந்துத்வாவாதிகளுக்கு சரியான மாற்று இந்த மாண செல்வங்களே!

வாழ்த்துக்கள் கன்ஹயா! அந்த மாணவர்கள் போட்ட கோஷங்களை தமிழ்படுத்தி கீழே தருகிறேன். இதனை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்.

-------------------------------------------------------------------------

சங் பரிவாரங்களிடமிருந்து விடுதலை!

ஆர்எஸ்எஸிடமிருந்து விடுதலை!

சாதி வெறியர்களிடமிருந்து விடுதலை!

ஜெய் ஹிந்த்! இந்தியா வாழ்க!

உரக்கச் சொல்வோம் விடுதலை!

திரும்பவும் சொல்வோம் விடுதலை!

நீங்களும் சொல்லுங்கள் விடுதலை!

வறுமையிலிருந்து விடுதலை!

பட்டினி சாவிலிருந்து விடுதலை!

தற்கொலையிலிருந்து விடுதலை!

நாட்டை சுரண்டுபவர்களிடமிருந்து விடுதலை!

நாட்டை விற்பவர்களிடமிருந்து விடுதலை!

இன் குலாப் ஜிந்தாபாத்!

ஜெய் ஹிந்த்! இந்தியா வாழ்க!

அரசியல் கொள்ளையிரடமிருந்து விடுதலை!

ஆதி வாசிகளுக்கு விடுதலை!

உரக்கச் சொல்வோம் விடுதலை!

நீங்களும் சொல்லுங்கள் விடுதலை!

ஆர்எஸஎஸிடமிருந்து விடுதலை!

சங்பரிவாரத்திடமிருந்து விடுதலை!

சாதி வெறியர்களிடமிருந்து விடுதலை!

No comments: