Followers

Tuesday, March 22, 2016

கோவில் பணத்தில் ஆட்டையைப் போட்ட பிஜேபி ராமனாதன்!

கோவில் பணத்தில் ஆட்டையைப் போட்ட பிஜேபி ராமனாதன்! இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வழிந்து கொண்டிருக்கும் பிஜேபியி...

Posted by Nazeer Ahamed on Tuesday, March 22, 2016

கோவில் பணத்தில் ஆட்டையைப் போட்ட பிஜேபி ராமனாதன்!

இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வழிந்து கொண்டிருக்கும் பிஜேபியினரின் செயலை பார்போம்.

தேசிய வங்கியான பள்ளத்தூர் இந்தியன் வங்கிக்கு வந்த பிஜேபி பிரமுகர் ராமனாதன் 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தந்து பணம் கேட்டுள்ளார். அந்த காசோலை மும்பை தாராவி பகுதியில் அமைந்துள்ள சித்தி வினாயகர் கோவிலுக்கு சொந்தமானது. சந்தேகமடைந்த பேங்க் ஊழியர்கள் அவரை மதியம் வரச் சொல்லியிருக்கிறார்கள். மும்பை கொவில் நிர்வாகத்திடம் இது பற்றி கேட்ட போது அது போலி காசோலை என்று தெரிய வந்தது. இதே போல் மோசடி செய்து புதுக் கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் கிளைகளிலும் பல லட்சம் பெறப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மதியம் பணம் வாங்க வந்த பிஜேபி பிரமுகர் ராமனாதனை காவல் துறை கைது செய்தது. இவனோடு சேர்த்து காரைக்குடி நகர பிஜேபி தலைவர் நாகராஜன், பிஜேபி உறுப்பினர்கள் நெல்லியான், ராஜா போன்றோரையும் காவல் துறை கைது செய்தது.

இந்து மத காவலன் வேடம் போடுவது இதற்காகத்தான். ஏமாந்த மக்களிடம் பணத்தை சுருட்டுவதே இவர்களின் வேலை. உண்மையான இந்து மத பக்தர்கள் பிஜேபியில் இருக்க மாட்டார்கள். முடிச்சவிக்கி, மொள்ளமாரிகள் அனைவரும் கடைசியில் சேரும் புகலிடம் பிஜேபி.

போலோ பாரத் மாதா கீ ஜே.....

No comments: