Followers

Saturday, November 16, 2019

ரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையில் 100-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் (193) மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் (175) நபர்கள் இரத்ததானம் செய்தனர். மருத்துவமனையின் இரத்தப் பற்றாக்குறை மற்றும் அவசர தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம் தேதிக்கு நாட்கள் குறைவாக இருந்தாலும் நமது சகோதரர்களின் உழைப்பால் அதிகமான மக்களிடம் இந்த தகவலை கொண்டு சென்று விழிப்புணர்வு செய்ததின் விளைவாக தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமில்லாமல், பிற மாநில மற்றும் பிற நாட்டு சகோதரர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்... அல்ஹம்துலில்லாஹ்!
இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகள் & கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பாக நடைபெற்ற முகாமிற்கும், ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனை இயக்குனர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.


No comments: