Followers

Tuesday, November 26, 2019

பெரியார் என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள்?

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.
அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இது வரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?


8 comments:

Dr.Anburaj said...

உண்மைதான்.தேவதாசிகள் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் மேற் சொன்ன சிரமங்கள் இருந்தது உ்ண்மை. மக்களுக்கு கிணற்றத்தவளை மனப்பான்மை. புதியதை எற்க மறுக்கும் தன்மை எல்லா சமூகத்திற்கும் உள்ள பொதுவான குணம்தான். சிலா்தான் எதிர்த்தார்கள்.அனைவரும் ஆதரித்தார்கள். பெண்களை வைப்பாட்டியாகவைக்கும் பழக்கம் அரேபியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. இசுலாம் பரவிய இடங்களில் இது அதிகம் உள்ளது.ஈராக்கில் வாழந்த எஸ்டி இன பெண்கள் பத்தாயிரம் பேரை ஐஎஸ் காடையர்கள் வைப்பாட்டியாக வைத்திருந்தனா்.
தேவதாசிகள் பற்றி பேச குரானுக்கும் சுவனப்பிரியனுக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன யோக்கியதை உள்ளது ?????
------------------------------------------------------
புரண யோக்கியா் போல கதைக்கும் சுவனப்பிரியன்
முத்தலாக் சட்டதிருத்தத்தை முஸ்லீம்கள் மனம் உவந்து ஏற்றுக் கொண்டீர்களா ?
நிக்கா ஹலால் என்ற கேடுகெட்ட அசிங்கத்தை சட்டம் போட்டு தடுக்க வேண்டும் என பல முஸ்லீம் பெ்ண்கள் கோரிக்கை வைத்துள்ளாார்களே. அதை ஆதரிக்க தாங்கள் தயாரா ?
குமுஸ் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்ற குரானின் வாசகத்தை நீக்க தங்களால் குரல் கொடுக்க முடியுமா ?
நிக்கா ஹலாலுக்கு எதிராக தங்களால் பதிவு செய்ய முடியுமா ?

தேசதாசிகள் ஒழிப்பு சட்டத்தை இந்துக்கள் நிறைவேற்றி விட்டோம். தாங்கள் நிக்கா ஹலாலை ......................?

Dr.Anburaj said...

பார்ப்பனர்கள் பெரியாா் குறித்து பேசவே மாட்டாா்கள். கழிவறையில் கழித்து தண்ணீா் ஊற்றிய மலம் குறித்து யாரும் நினைத்துக்கொண்டிருக்க மாட்டாா்கள்.

பன்றிக்கு புலூல் போட்டு பார்பனர்களை கேவலப்படுத்துவதாக நினைத்து தங்களின் தரத்தை பாழாக்கிக் கொண்டிருப்பது பெரியாா் கூட்டம்தான்.
தேசதாசி அமைப்பை அழித்தவா் முத்து லெட்சுமி அவர்கள்.
கள்ளு கடையை திறந்து விட்டவா் கருணாநிதிதானெ- அவர்தானே பார்ப்பன எதிா்ப்பு இயக்கத்தின் தலைவா்.
இன்று தேவதாசி இயக்கம் அழிந்து விட்டதா ? விபச்சாரம் பட்டணங்களிலகொடி கட்டி பறக்கின்றது. தேசதாசி இயக்கம் அழியவில்லை. கால் கோ்ல் call Girl என்ற கௌரவ பட்டத்தொடு இன்று அதிக அளவில் பெண்களை ஈடுபடுத்தி வருகின்றது.எந்த பெரியாா்தாசனாவது இதை அழிக்க எதாவது செய்தானா ? பயன்அடைவது இவர்கள்தானே.

Dr.Anburaj said...

ஜாதிகள் என்பது என்ன? .Swami Vivekananda
-
ஒவ்வொரு தொழிலை செய்பவர்கள் தங்களை ஒரு பிரிவாக (ஜாதியாக) கருதிக்கொண்டார்கள்.
உதாரணமாக மீன்பிடி தொழில் செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், நெசவு வேலை செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், சிற்பவேலை செய்பவர்கள் ஒரு பிரிவு.இவ்வாறு ,அவர்கள் செய்யும் வேலையை வைத்து தனித்தனி பிரிவுகளாக பிரிந்துகொண்டார்கள். இது யாரும் உருவாக்கவில்லை. தானாக ஏற்பட்ட ஒன்று.
இந்த பிரிவுகளில் யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு எழுவது இயல்பானது . அறிவு அதிகம் உள்ளவன், சிறந்த குணம் கொண்டவன் யாரோ அவன் உயர்ந்த பிரிவாக கருதப்பட்டான்.
-
அந்த காலத்தில் ஆட்சிசெய்பவர்கள் மக்களிடமிருந்து வரிபணத்தை பெற்றுவந்தார்கள். அனைவரிடமும் ஒரு போல் வரியை பெறமுடியாது.ஆகவே இந்த பிரிவுகளை முறையாக வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதை அவர்கள் நான்காக பிரித்தார்கள். அதை அவர்கள் ஸ்மிருதி அல்லது நாட்டின் சட்டங்கள் என்று அழைத்தார்கள்.மக்களை ஆளும் மன்னர்களே சட்டங்களை இயற்றினார்கள். ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களுக்கு ஏற்றார்போல் சட்டங்களை மாற்றி அமைத்துக்கொண்டார்கள்.எல்லா காலத்திலும் ஒரே சட்டம் பின்பற்றப்படவில்லை.
-
ஸ்மிருதிகளில் கூறப்படும் ஜாதிமுறைகள் எவ்வாறு மனிதர்களை பிரித்தது?
-
ஒரு மனிதனின் உடலை எடுத்துக்கொள்ளுங்கள்.
மேல்பாகம் தலையில் மூளை உள்ளது. மூளையில் வேலை சிந்திப்பது. சிந்திப்பவர்கள்,அதிகம் வேலை செய்வதில்லை,ஆனால் அவர்களிடம் மிகப்பெரிய அளவில் அறிவாற்றல் உள்ளது.அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்து ஆயுர்வேதத்தை உருவாக்குவார்கள். மனிதனை ஆராய்ந்து ஜோதிட சாஸ்திரத்தையும்,விண்வெளியை ஆராய்ந்து வானவியலையும் கண்டுபிடிப்பார்கள். அல்லது மனிதனின் உடலை ஆராய்வார்கள், மனிதனின் மனத்தை ஆராய்வார்கள், பூமியை ஆராய்வார்கள், இன்னும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தேவையான புதியவற்றை கண்டுபிடித்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் கண்டுபிடித்ததை மன்னரிடம் கொடுத்து,மக்களுக்கு பயன்படும் படி செய்வார்கள். அவர்களிடமிருந்து அரசாங்கள் வரி வாங்க முடியாது,பதிலுக்கு அரசாங்கம் தான் அவர்களுக்கு தேவையான உதவிளை செய்து,அவர்களின் அறிவை பெற்றுக்கொள்ளவேண்டும்.இவ்வாறு அறிவை உபயோகித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
-

Dr.Anburaj said...

2
பிராமணர்கள் என்றால் பிரம்மம் அதாவது இறைவனை குறித்து சிந்திப்பவர்கள். அவ்வாறு இறைவனை குறித்து சிந்திக்கும் போது இயற்கையின் ரகசியங்கள் அனைத்தையும் அறிகிறார்கள். அதையே பல்வேறு சாஸ்திரங்களாக உருவாக்கி மக்களுக்கு பயன்படும் படி செய்கிறார்கள். இவர்கள் ரிஷி என்றும் சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் சுயமாக சம்பாதிக்கக்கூடாது,அந்த நாட்டின் அரசர்கள் தரும் உணவை பெற்றுக்கொண்டு, பதிலுக்கு தங்கள் அறிவை அரசர்களுக்கு கொடுத்து வாழவேண்டும்.
-
அடுத்தது நமது உடலில் தலைக்கு கீழ் உள்ள பாகம் இங்கே இதயம் உள்ளது. இதயம் என்பது மற்றவர்களுக்காக இரங்குவது,உதவுவது,நல்லவர்களை காப்பது.தர்மத்தை நிலை நாட்டுவது. இவர்கள் நல்லோரை காக்கவும் தீயோரை அளிக்கவும் தங்கள் வாழ்நாளை செலவு செய்கிறார்கள். பொதுவாக அரசர்கள், மந்திரிகள் போன்ற ஆட்சியாளர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்களை சத்திரியர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள், பல தொழில்களை செய்வோர்,விவசாயிகள், வியாபாரிகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, தர்மத்தை நிலைநாட்டும் பணியை செய்வார்கள்.
-
அடுத்து நமது உடலில் இருக்கும் முக்கிய பாகம் வயிறு. இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் உணவு அளித்தல். சமுதாயத்தில் உணவு உற்பத்தி, இதனுடன் தொடர்புள்ள தொழிற்சாலைகள், கலைக்கூடங்கள் உட்பட அனைத்து தொழில் செய்பவர்களும் ஒருவரோடு ஒருவர் வாழ்வின் பின்னிப்பிணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வைசியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யாருக்கும் அடிபணியாமல் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் அனைவருமே வைசியர்கள் என்று அழைக்கப்படார்கள்.இவர்களுக்கு வரி விதிக்கப்பட்டது. சமுதாயத்தில் உற்பத்தியை பெருக்குபவர்கள் இவர்கள் மட்டுமே.இவர்களை திருடர்களிடமிருந்தும்,பிறநாட்டினரிடமிருந்தும் காப்பது அரசனின் கடமை
-
அடுத்து நமது உடலில் முக்கியமான உறுப்பு கால்கள். கால்கள் நடந்து செல்ல உதவுகிறது. மேலே உள்ளவர்கள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதை ஏற்று நடப்பது தான் கால்களின் வேலை. வைசியர்கள் மற்றும் சத்திரியர்களின் கீழ் வேலை செய்யும் அனைவரும் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரர் என்றால் முக்கியமானவர் என்று பொருள்.கிருஷ்ணரை மகாபாரதத்தின் சூத்திரதாரி என்று சொல்வார்கள்.
உடலின் எல்லா பாகங்கள் நன்றாக இருந்தாலும் கால்கள் இல்லாவிட்டால் ,அவன் முழுமனிதனாக முடியாது. ஆகவே சூத்திரர்கள் ஒரு நாட்டிற்கு முக்கியமானவர்கள். சூத்திரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்து. அவர்களை சுதந்திரமாகவும் அன்பாகவும் நடத்த வேண்டியது,சத்திரியர்கள் மற்றும் வைசியர்களின் கடமை.
-
பிராமணர்கள் தங்கள் அதிகாரத்தை சத்திரியர்கள்மீது மட்டுமே செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் இறைவனை மட்டுமே நாடி வாழ்கிறார்கள். சத்திரியர்களுக்கு கூட அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல, இறைவனைத்தவிர இந்த உலகத்தில் அவர்கள் யாருக்கும் கடட்டுப்பட்டவர்கள் அல்ல.அவர்களுக்கு தேவைகள் குறைவு, சத்திரியர்கள் அவர்களது தேவைகளை தீர்த்துவிடுவதால்,மற்ற பிரிவினர்களுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்கக்கூடாது.வியாபாரிகளிடமிருந்து பணமோ பொருளோ வேறு எதையுமே வாங்கக்கூடாது, அது மட்டுமல்ல சூத்திரர்களை தங்களின் வேலைகளை செய்வதற்காக அமர்த்தக்கூடாது.அவர்கள் சுயமாக சம்பாதிக்ககூடாது. சொந்தமாக நிலமோ, ,உடமைகளோ எதுமே இருக்ககூடாது. இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

Dr.Anburaj said...

சத்திரியர்கள், பிராமணர்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள், பிராமணர்களிடம் அறிவை பெற்றுக்கொண்டு, நல்லாட்சி நடத்துவார்கள். தங்கள் படைகளில் உள்ள சூத்திர்கள்(போர்வீரர்கள்) மற்றும் தங்களின் கீழ் உள்ள வைசியர்களிடம் அன்பாகவும் நடந்துகொண்டு, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.
-
இந்த ஜாதிமுறைகள் பிறப்பை அடிப்படையாக கொண்டதா?-
கண்டிப்பாக இல்லை. ஒருவன் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் கீழ்தான் பிறந்து அவர்களின் கட்டுப்பாட்டுடன் தான் வளர்கிறான்.ஆனால் வளர்ந்த பிறகு அவனிடம் உயர்ஜாதிக்கான திறமைகள் இருந்தால்,அதை நிரூபிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவன் மேல் ஜாதியாக கருதப்படுவான். உதாரணமாக ஒரு போர்வீரன் சிறந்த திறமைகளை உடையவனாக இருந்தால், சத்திரியனாக மாறி, ஒரு நாட்டையே ஆட்சி செய்ய முடியும்.அதேபோல் சூத்திரன் சுயமாக தொழில்புரிந்து வைசியனாகவும் மாற முடியும்.
-
அதேபோல் உயர் ஜாதியில் உள்ள ஒருவன் தாழ்ந்த சாதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு சத்திரியன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்யாவிட்டால், மக்கள் கலகத்தில் ஈடுபட்டு அவனை சிறைபிடித்து, வேலைக்காரன் (சூத்திர)நிலைக்கு இறக்கிவிடுவார்கள். ஒரு பிராமணன் தன் கடமையை சரியாக செய்யாவிட்டால், பிராமண ஜாதியிலிருந்து விலகி, சத்திரிய ஜாதியை அடைய வாய்ப்புள்ளது.
-
இதை கீழ்கண்ட உதாரணங்கள் மூலம் பார்ப்போம். துரோணாச்சாரியர் பிறவியில் பிராமணர்,ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்டதால்,அவர் சத்திரியராக மாறவேண்டியிருந்தது.விதுரர் பிறவியில் சூத்திரர், ஆனால் சத்திரியனுக்குரிய வீரம் இருந்ததால் சத்திரியனாகவும், பிறகு அதை துறந்து பிராமணலட்சியத்தை ஏற்றுக்கொண்டு பிராமணனாகவும் உயர்ந்தார். கர்ணன் வளர்ப்பில் சூத்திரராக இருந்த போதும்,அவரது வீரம் காரணமாக சத்திரியராக மாறினார்.இவ்வாறு மகாபாரதத்தில் பல உதாரணங்களை காணலாம்.
-
ஸ்ரீகிருஷ்ணர் ஏன் ஜாதிகளை ஆதரித்து பேசினார்?
-
அந்த காலத்தில் ஜாதி முறைகள் சிறப்பாக இயங்கி வந்திருக்கின்றன. அந்தந்த ஜாதியினர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வந்ததால்,சமுதாயம் சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அதனால் தான் கிருஷ்ணர் இந்த பிரபஞ்சத்தில் சிறப்பான அனைத்தையும் தானே உருவாக்கினேன் என்று ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வரும்போது ஜாதியையும் சேர்த்து சொன்னார்.
-
கிருஷ்ணர் தனது நாட்டை ஆளும்போது சிறந்த சத்திரியராகவும், அர்ஜுனனுக்கு வேதாந்த போதனை செய்யும்போது பிராமணனாகவும், அர்ஜுனனுக்கு தேரோட்டும்போது சூத்திரனாகவும் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.
-

Dr.Anburaj said...

அப்படியானால் இந்த ஜாதிமுறைகள் எப்படி சீர்கெட்டன?
-
ஒரு ஜாதியில் பிறக்கும் ஒருவன் ,அந்த ஜாதிக்குரிய பண்புகள் இல்லாதவனாக இருந்தால், எந்த ஜாதிக்குரிய பண்புகள் அவனிடம் இருக்கின்றனவோ, அந்த ஜாதியில் சேர்த்துவிடும் பழக்கம் பின்பற்றப்படவில்லை.

உதாரணமாக பிராமண ஜாதியில் பிறக்கும் ஒருவன், பிறந்த உடனேயே பிராமணனுக்குரிய பண்புகளை பெற்றுவிடுவதில்லை. பல ஆண்டுகள் கடின தவம் புரிந்த பிறகு தான் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் பண்புகளை பெற்று பிராமணனாக மாறுகிறான். ஆனால் வளர்ந்த பிறகும் இந்த பண்புகளை பெறாமல் ஒருவன் தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டு, அரசர்கள் தரும் சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்ததும், அவனை அந்த பிராமண சமுதாயம் ஆதரித்ததும் முதல் தவறு.
-
தங்களை பிராமணர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், அதற்கான தகுதிகள் இருப்பதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த ஜாதியின் சேர்ந்துகொள்ள வேண்டும். . ஆகவே முற்காலத்தில் பிறப்பை அடிப்படையாக வைத்து ஜாதிகள் உருவாக்கப்படவில்லை. அது குணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
-
இது பற்றி வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
-
பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியினால் ஒருவன் பிராம்மணனா என்றால் இல்லை.பிறப்பின் அடிப்படையில் வருபவன் பிராமணன் அல்ல. ருஷ்ணசிருங்கர்,கௌசிகர்,வால்மீகி,வியாசர்,கௌதமர்,வசிஷ்டர்,அகத்தியர்,வியாதர் போன்ற பல ரிஷிகள் பிராம்மண குலத்தில் பிறக்கவில்லை.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வருபவன் பிராம்மணன் இல்லை. -சாமவேதம்-வஜ்ரஸுசிகோபநிஷத்-ஸ்லோகம்-5
-
அறிவு எதுவரை சுயநலம் அற்றதாக இருக்குமோ அது வரை நமக்கும் பிறருக்கும் நல்லது. எப்போது அறிவு தன்நலத்தில் கவனம் செலுத்துமோ, அப்போது அனைத்தும் கெட்டுவிடும். சத்திரியர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் தங்கள் சுயநலத்தை நாடியது தான் இந்த ஜாதிமுறைகள் கெட்டுப்போனதற்கான முதல் காரணம்.
-
முற்காலத்தில் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு ஜாதிக்கு எளிதாக செல்ல முடிந்தது என்பதை பார்த்தோம்.
சிலரின் சுயநலத்தால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, ஜாதிகள் கடக்கமுடியாத சுவர்களாக மாற்றப்பட்டன.
ஒவ்வொரு ஜாதிக்கும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவைகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டார்கள்.
இது சில ஜாதியினர் முன்னேறுவதற்கும்,சலுகைகளை பெறுவதற்கும் வசதியாக இருந்தது. சில ஜாதியிர் தொடர்நது பின்னோக்கி சென்று, கடைசியில் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படார்கள்.
-

Dr.Anburaj said...

சூத்திரர்கள் தினமும் மாடுகளைவிட அதிகமாக வேலை வாங்கப்பட்டார்கள். அவர்களின் சுதந்திரம் பறிக்கபட்டது. முற்காலத்தில் மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சூத்திரனாக இருந்தபோதும் அரசர்கள் கூடிய சபையில் பேச அனுமதிக்கபட்டன். அந்த காலத்தில் இருந்த நிலையை பிற்காலத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். உயர்சாதியினர் வாழும் தெருக்களில் செல்ல சூத்திரர்கள் அனுமதிக்கப்படவில்லை.அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. வேதம் படிக்க அனுமதி இல்லை. இவ்வாறு அந்த காலத்தில் நிலவிய அற்புதமான ஜாதி என்ற அமைப்பு பிற்காலத்தில் தீமைநிறைந்ததாக மாறிவிட்டது.
-
ஸ்மிருதிக்கும் இந்து மத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
-
ஸ்மிருதிகள் என்பவை சட்டபுத்தங்கள். இவைகள் தொடர்ந்து மாறுபவை. ஸ்ருதிகள் அல்லது வேதம் ஒருபோதும் மாறாதது. இந்த வேதத்தின் சாரம் வேதாந்தம்(இந்துமதம்). வேதாந்தம் என்ன போதிக்கிறது? இந்த இயற்கையில் சிறைபட்டு இருக்கும் மனிதர்களை விடுவித்து, இயற்கையை கடந்து செல்வது எப்படி? என்று போதிக்கிறது. ஒரே வரியில் சொன்னால் வேதாந்தத்தின் லட்சியம் முக்தி. ஆகவே இந்த ஸ்மிருதிகளுக்கும் இந்துமதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்மிருதிகள் இந்த உலகில் வாழ்வதற்கான சட்டங்களை பற்றி சோல்கிறது, இந்துமதம் இந்த உலகை கடந்து செல்வது எப்படி என்று போதிக்கிறது.
இன்றைய அரசியல் அமைப்பு சட்டங்களே அன்றைய ஸ்மிருதிகள்.
-
ஜாதியை நீக்க முடியுமா?
-
ஜாதி என்றால் என்ன என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.ஜாதி என்பது தொழில் காரணமாகவும், குணத்தில் காரணமாகவும் ஏற்படுகின்ற ஒன்று.
தற்காலத்தில் இந்த ஜாதிமுறைகள் உருவம் மாறியிருக்கின்றன.
-
1.அந்த காலத்து பிராமணர்கள்,அறிவை பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தற்கால விஞ்ஞானிகளாக மாறியிருக்கிறார்கள். பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள்.அரசாங்கம் அவர்களை பாதுகாத்துவருகிறது. அவர்களது அறிவு
அரசாங்கத்திற்கு பயன்பட்டுவருகிறது.
-
2. நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பிரதமர், முதல்வர்,அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தான் சத்திரியர்கள்.இவர்கள் தான் ஸ்மிருதிகளை(சட்டங்களை)உருவாக்குகிறார்கள்.
-
3.சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வியாபாரிகள்,விவசாயிகள் அனைவரும் வைசியர்கள்.இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வரியாக செலுத்துகிறார்கள்.
-
4. போர்வீரர்கள் மற்றம் தொழிற்சாலை உட்பட அனைத்து இடங்களிலும் சம்பளத்திற்காக வேலை செய்யும் அனைவரும் சூத்திரர்கள்.இவர்களுக்கு சுயமாக சிந்திக்க உரிமை இல்லை. மேலே உள்ள முதலாளிகள் இட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகிகள் இவர்களையும் காப்பாற்றுகிறார்கள்.
-
இப்போது முற்காலத்தை போலவே ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு எளிதாக மாறமுடியும். ஒரு தொழிலாளி ,திறமையுள்ளவனாக இருந்தால் வைசியனாக,அதாவது முதலாளியாக மாற முடியும். ஒரு வைசியன் திறமையானவனாக இருந்தால் நாட்டை ஆளும் சத்திரியனாக முடியும். அறிவுள்ள யாரும் பிராமணனாக அதாவது விஞ்ஞானியாக முடியும்.
-

Dr.Anburaj said...

நிறைவுரை
-
ஜாதி அல்லது பிரிவு என்பது எக்காலத்திலும் இருக்கக்கூடியது.ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை உருவாக்குவது வேதத்திற்கு எதிரானது.மனித குலத்திற்கே எதிரானது.வேறுபாடுகள் என்பது எல்லா நாட்டிலும் இருக்கக்கூடியது. ஆனால் அவர்களுக்குள்ளே சுதந்திரமும், முன்னேறுவதற்கான வாய்ப்பும் இருக்கவேண்டும்.-
-
இந்த ஜாதி அமைப்புகளை சமுதாயம் தான் ஏற்படுத்துகிறதே தவிர மதம் ஏற்படுத்தவில்லை. அந்த காலத்திலம் சரி எந்த காலத்திலும் சரி இந்துமதம் ஜாதிகளை உருவாக்கவில்லை. ஜாதிகளின் விசயத்தில் தலையிடவும் இல்லை. இனிமேலும் அது தலையிடாது. ஆகவே யாராவது ஜாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் அவர்கள் உண்மை அறியாதவர்கள்,வரலாறு தெரியாதவர்கள், இந்துமதத்தின் மீது வேண்டும் என்றே அவதூறு பரப்ப நினைப்பவர்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர் (9-2-2017)