Followers

Friday, November 08, 2019

ஃபஹீம அன்சாரி 12 வருடங்களுக்குப் பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை!



ஃபஹீம அன்சாரி 12 வருடங்களுக்குப் பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை!
மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதான ஃபஹீம் அன்சாரி 12 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என்று விடுதலை.
துபாயில் பணியில் இருந்த அன்சாரி இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுமுறையை கழிக்க மும்பை வந்துள்ளார். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மும்பை காவல்துறை இவரை கைது செய்தது. இவர் குற்றமற்றவர் என்று மறைந்த ஹேமந்த் கர்கரேயும் உயரதிகாரிகளிடம் சொல்லியுள்ளார். கர்கரே துரதிஷ்டவசமாக இறந்து விடவே சிறையில் அடைக்கப்பட்டார் அன்சாரி. தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அன்சாரி கைதாகும் போது இவரது மகளுக்கு வயது 3. தற்போது இவரது மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சென்ற புதன் கிழமை அன்சாரி விடுதலை செய்யப்படுகிறார்.
இழந்து போன அன்சாரியின் 12 வருடங்களை திருப்பி தந்து விடுமா நமது நீதித் துறை?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
09-11-2019


No comments: