Followers

Wednesday, November 06, 2019

மழித்தலும் நீட்டலும் வேண்டா - போலி சாமியார்கள் கவனிக்க...

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
குறள் :280
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
------------------------------------------
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
குறள் 273:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
-----------------------------------------
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
குறள் 271:
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.
----------------------------------------------
மேலே நான் கொடுத்திருக்கும் குறள்களை படித்துப் பாருங்கள். அந்த காலத்திலேயே மதத்தின் பெயரால் ஆன்மீக வாதிகள் மக்களை ஏமாற்றி பிழைத்து வந்திருக்கின்றனர். இதனால் தான் வள்ளுவர் வெகுண்டு மொட்டை அடித்துக் கொண்டோ சடா முடி வளர்த்துக் கொண்டோ தனது கோலத்தை மாற்றிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை. மக்களுக்கு தீமை பயக்கும் செயல்களை செய்யாது நல்லொழுக்கத்துடன் வாழ்பவனே உண்மையான ஆன்மீகவாதி என்கிறார் திருவள்ளுவர்.
எல்ஐசி ஏஜெண்டாக வாழ்வை துவக்கிய விஜயகுமார் பின்னர் தன்னை கல்கி பகவானாக உருவகப்படுத்திக் கொண்டார். இன்று பல கோடிகளுக்கு அதிபதி. பல கோடிக்கு அரசுக்கு வரி செலுத்தாமலும் ஏமாற்றியுள்ளார். மக்கள் ஏமாறுகிறார்கள். நித்தியானந்தா, ரவி சங்கர் என்று வரிசையாக போலி ஆன்மீகவாதிகள் தினம் தினம் புதுப் புது பெயரில் உலா வருகின்றனர்.
மற்றொரு புறம் அரசியலில் அதிகாரம் பெறுவதற்காக மோடி, அமீத்சா போன்றவர்கள் இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி மக்களை பிளக்கின்றனர். விபரம் புரியாத இந்து மக்களும் அவர்கள் விரிக்கும் வலையில் வீழ்கின்றனர். இவர்கள் இது போன்ற திருக்குறள்களை உள் வாங்கியிருந்தால் போலி ஆன்மீக வாதிகளை என்றோ இனம் கண்டு பிடித்திருப்பார்கள்.
ஆக... ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்!


2 comments:

Dr.Anburaj said...

தோற்றம் என்பது முக்கியம்.

முஸ்லீம்கள் தங்களுக்கென்று ஒரு வகை உடை தாடி கரண்டைக்கு மேல் நிற்கும் வேட்டி சென்ட மணம் வணக்கம் செலுத்தும் முறை முஸ்லீம்களை கொண்டால் ஒட்டிக் கொள்ளும் பண்பு
பெண்கள் என்றால் திலகம் யில்லா நெற்றி, கறுப்பு கவச உடை சென்ட மணம்

லாத்தா உம்மா வாப்பா காக்கா என்று தனி தமிழ் சொற்கள்

திட்டும் போது ” முள்ளுபோல் முறிந்து போவான் ” என்று திட்டுவது தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் பெண்களிடம் மட்டுமே கேடக முடியும்.

Dr.Anburaj said...


ஆஸ்கா் விருது பெற்ற ஹாலிவுட் நாயகி
ஜூலியா ரோபர்ட்ஸ் இந்து மதத்தை தழுவினாா்.

- தகவலுக்கு