Followers

Monday, November 18, 2019

ஆப்ரிக்க நாட்டவர் குர்ஆன் ஓதிக் கொண்டே வேலை செய்கிறார்!

ஆப்ரிக்க நாட்டவர் குர்ஆன் ஓதிக் கொண்டே வேலை செய்கிறார்!
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சவுதியில் குர்ஆன் ஓதிக் கொண்டே பள்ளி வாசலை தூய்மைபடுத்துகிறார். குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாபிழ் இவர். இஸ்லாம் நிறத்தையோ, இனத்தையோ, நாட்டையோ, தோற்றத்தையா பார்ப்பதில்லை. அவர்களின் உள்ளத்தைத்தான் பார்க்கிறது.
வேறு வேறு மார்க்கங்களில் வேதத்தை எளியவர்கள் படித்தால் அவர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லி சட்டமாகவே இயற்றி வைத்துள்ளனர். ஆனால் இஸ்லாமோ குர்ஆன் முழு மனித குலத்துக்கும் சொந்தமானது என்று பறை சாற்றுகிறது.
---------------------------------
இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே திகழ்கிறது. (68:52)
நேர்வழியை தெளிவாக அறிவிக்கக்கூடியது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியது. (2:185)
மனிதர்களை இருளிலிருந்து ஒளிக்கு கொண்டு வரும் நூல். (5:15)
----------------------------------
நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரையில் சொல்வதாவது!
‘மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
---------------------------------
மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576,)
-----------------------------------
மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது)


No comments: