Followers

Tuesday, November 12, 2019

#என்_வீட்டின்_ஓர்_மூலையில் #நீ_தொழுதுகொள்.

தொப்புள் கொடியின் கண்கலங்க வைக்கும் பதிவு
--------------------------------------------
இந்திய விடுதலைக்கு எண்ணிலடங்கா தியாகிகளை உருவாக்கிய சமூகம்.
தியாகங்களை சுமந்த சமூகம்..,
பிரிடிஷ்சாரை எதிர்த்து ஆங்கிலம் கற்க மாட்டோம் "ஹராம்" என ஆங்கிலேயர் எதிர்ப்பை தம் மார்க்கக் கடமையாக்கிக் கொண்டவர்கள்..
ஓர் சமகால நிகழ்வு...,
2015 பெருவெள்ளம்!
இந்துக்களே ஒன்றுபடு என முழங்கியவன் முக்காடிட்டு தப்பிப் பிழைத்தான்.
இந்து சகோதரிகளை படகில் ஏற்ற தன் முதுகை படிக்கல்லாக்கியவன் #இசுலாமியன்!
பேரிடரில், ஆரியம் ஆலயங்களை கதவடைத்துக் கொண்ட வரலாற்றை அறிவீர்களா?
ஒடுக்கப்பட்டவன் உள்ளே நுழைந்தால் தீட்டாகி விடுமல்லவா?
#மசூதிகள்தான் எம் மழலைகளை தாலாட்டியது!
தம்மை தொட மறுத்த பார்ப்பானையும் விட்டுவிட மறுத்த மானுடநேயம்!
அனிதா முதல் சுர்ஜித் வரை எங்கள் இழப்புக்களை எள்ளி நகையாடியக் கூட்டம் இந்துக்களே வாருங்கள் என அழைக்கிறது!
என் இழப்பில் தோள் கொடுத்த பக்கத்து வீட்டு #பாய்தான்டா என்னுயிர் தோழன்..!
#கோயில்கள்..
எங்கள் வீட்டுப் பெண்களை தேவதாசிகளாக்கியது.
#கோயில்கள்..
எம் சமூகத்தை தீண்டத்தகாதவனாக்கியது.
#கோயில்கள்..
என்னை சூத்திரன் என சொல்லி சிரித்தது.
#மசூதிகள்..
மழைகால சத்திரங்களாயின!
#மசூதிகள்..
கோடைகால குடிநீர் விநியோக வாரியங்களாயின!
#மசூதிகள்..
பாதுகாக்கும் கருவறைகளாயின!
#முஸ்லீம்கள்தான் எம் மண்ணில் தன்னலமற்ற பேரிடர் மீட்புக்குழு..!
எனக்கு கல்வி தரமறுத்த இராமனுக்காக..,
#என்_தோழன்_இரஹீமை இழக்கத் தயாராக #இல்லை.
ஒடுக்கப்பட்டவனை அரவணைக்கிற மஸ்ஜித்களை இங்கே இடிப்பதில் ஆச்சர்யமில்லை.


1 comment:

Dr.Anburaj said...

1000 ஆண்டுகள் அடிமை வாழ்வ வாழ்ந்ததன் விளைவு இந்துக்களில் நிறைய 23ம் புலிகேசிகள பெருகி விட்டாாகள். ஆகவேதான் இப்படி பிதற்றிக்கொண்டிருக்கின்றான். வாழ்க


புலவர்களுக்கழகு பொய்கள்தான்.
பொய்களை அடிக்கியுள்ளாா்.