Followers

Tuesday, November 05, 2019

இளைஞர்களை மிரட்டும் இந்துத்வா கும்பல்!

இளைஞர்களை மிரட்டும் இந்துத்வா கும்பல்!
ஒரு மார்க்கமோ மதமோ கட்டாயப் படுத்தி வந்து விடுவதில்லை. 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று அடித்து உதைக்கிறார்கள். ஆனால் அந்த இஸ்லாமிய இளைஞர்கள் வாயிலிருந்து 'அல்லாஹ் அக்பர்' என்ற வார்த்தையே வருகிறது. ஆர்எஸ்எஸ் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை பல வகைகளில் மிரட்டிப் பார்க்கிறது. ஆனாலும் ஒருவரும் இஸ்லாத்தை விட தயாரில்லை.
இந்கு இந்த காணொளியில் மூன்று இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் குர்ஆனை பல ஆண்டுகள் ஆய்வு செய்த பின்னரே ஏக தெய்வ கொள்கையை விரும்பி ஏற்றதாக சொல்கிறார்கள். ஆனாலும் காவல் துறை மூலம இந்துத்வா இந்த இளைஞர்களுக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டுள்ளது. எந்த சிரமம் வந்தாலும் இந்த கொள்கையை விட்டுத் தர மாட்டோம் என்றும் கூறுகின்றனர்.
ஏன் இந்த மாற்றம்? எப்படி இத்தகைய உறுதி வந்தது? என்று என்றாவது இந்துத்வாக்கள் சிந்தித்தது உண்டா? தான் பிறந்த மதத்தை விடுவதும் தான் பெற்ற தாய் தந்தை உற்றார் உறவினர்களை உதறி இஸ்லாத்தை ஏற்பது என்பது சாதாரண காரியமா? எந்த அளவு தனது சொந்த மதத்தில் அவமானப் பட்டிருந்தால் இத்தகைய முடிவை எடுக்கத் துணிவார்கள்? என்று இவர்கள் சிந்திக்க வேண்டாமா? தங்கள் மதத்தில் உள்ள வர்ணாசிரம பேதத்தை வேரறுக்காமல் இஸ்லாத்தை ஏற்பவர்களை மிரட்டுவதால் ஏதேனும் பலன் விளைந்து விடப் போகிறதா? இனியாவது இவர்கள் சிந்திப்பார்களா?


No comments: